மறைந்த தங்கையின் நினைவாக அவர் படித்த அரசு பள்ளிக்கு கலையரங்கம் கட்டிக் கொடுத்த அண்ணன் - கணபதி பாளையத்தில் நெகழ்ச்சி

மறைந்த தங்கை மணிமேகலை படித்த பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணிய அண்ணன் முருகேசன், மணிமேகலை படித்த அரசு பள்ளிக்கு கலையரங்கம் ஒன்றை கட்டிக் கொடுத்து, சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் நிதி உதவியும் வழங்கி உள்ளார்.


கோவை: கோவை சூலூர் அருகே தொழிலதிபர் ஒருவர் உயிரிழந்த தனது தங்கை பயின்ற பள்ளிக்கு அவரது நினைவாக கலையரங்கம் கட்டிக் கொடுத்த சம்பவம் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கணபதி பாளையம் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் பயின்ற முருகேசன் என்பவர் மணிமேகலை டெக்ஸ் என்ற பெயரில் பின்னலாடை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது தங்கை மணிமேகலையும்

படித்துள்ளனர். இதில் மணிமேகலை பள்ளியில் சிறந்த மாணவியாக திகழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் எதிர்பாராத விதமாக முருகேசனின் தங்கை மணிமேகலை உயிரிழந்தார்.

மணிமேகலை படித்த பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் முருகேசன் எண்ணியுள்ளார். எதிர்பாராத விதமாக தன் தங்கை மணிமேகலை இறந்த காரணத்தினால் அவர் படித்த அரசு பள்ளிக்கு முருகேசன் பள்ளிக்கு கலையரங்கம் ஒன்றை கட்டிக் கொடுத்து சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் நிதி உதவியும் வழங்கி உள்ளார்.



இந்த கலையரங்கம் திங்களன்று திறக்கப்பட்டது. இதில் ஊர் பொதுமக்கள், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்‌. இது குறித்து பேசிய முருகேசன் இந்த பள்ளியின் முன்னாள் மாணவனாகவும், இந்த பள்ளியில் படித்த என் தங்கையின் நினைவாகவும் இந்த பள்ளியை கட்டிட பராமரிப்பதற்காகவும் பள்ளி குழந்தைகளுக்காக கலையரங்கத்தை கட்டிக் கொடுத்துள்ளேன். இதுபோன்று மற்றவர்களும் தாங்கள் படித்த பள்ளிக்கு செய்ய முன்வந்தால் அரசு பள்ளிகள் மேம்படும் என தெரிவித்தார்.

Newsletter

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...