கவுண்டம்பாளையத்தில் பொங்கல் பரிசு தொகை ரூ.1,20,000 திருடிய ரேஷன் கடை ஊழியர் கைது

120 பேருக்கு பொங்கல் பரிசு தொகை வழங்காமல், காலதாமதம் செய்து வந்த ரேஷன் கடை ஊழியர் மதியரசுவை, போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மதியரசு ( வயது 35). இவர் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரிடம் கடந்த வாரம் பொங்கல் பரிசு தொகையாக 841 பேருக்கு தலா ரூ.1000 வழங்க ரூ.8,41,000 ஒப்படைக்கப்பட்டது.

இதில் 721 பேருக்கு பணத்தை முறையாக கொடுத்து விட்டார். மீதமுள்ள 120 பேருக்கு பணம் வழங்கவில்லை. அந்த பணத்தை திரும்ப ஒப்படைக்குமாறு கடந்த 17ஆம் தேதி அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் காலதாமதம் செய்து வந்தார். அவரை பிடித்து பணத்தை பெற முயற்சி செய்தபோது தலைமறைவாகிவிட்டார்.

அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் ரேஷன் கடை மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் புகார் செய்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் வெள்ளிராஜ் வழக்கு பதிவு செய்து பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்காமல் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் மோசடி செய்த மதியரசுவை நேற்று கைது செய்தார். பின் இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...