கவுண்டம்பாளையத்தில் பொங்கல் பரிசு தொகை ரூ.1,20,000 திருடிய ரேஷன் கடை ஊழியர் கைது

120 பேருக்கு பொங்கல் பரிசு தொகை வழங்காமல், காலதாமதம் செய்து வந்த ரேஷன் கடை ஊழியர் மதியரசுவை, போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மதியரசு ( வயது 35). இவர் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரிடம் கடந்த வாரம் பொங்கல் பரிசு தொகையாக 841 பேருக்கு தலா ரூ.1000 வழங்க ரூ.8,41,000 ஒப்படைக்கப்பட்டது.

இதில் 721 பேருக்கு பணத்தை முறையாக கொடுத்து விட்டார். மீதமுள்ள 120 பேருக்கு பணம் வழங்கவில்லை. அந்த பணத்தை திரும்ப ஒப்படைக்குமாறு கடந்த 17ஆம் தேதி அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் காலதாமதம் செய்து வந்தார். அவரை பிடித்து பணத்தை பெற முயற்சி செய்தபோது தலைமறைவாகிவிட்டார்.

அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் ரேஷன் கடை மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் புகார் செய்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் வெள்ளிராஜ் வழக்கு பதிவு செய்து பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்காமல் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் மோசடி செய்த மதியரசுவை நேற்று கைது செய்தார். பின் இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...