பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுபொருட்கள்: கோவை மாநகராட்சி நடத்தும் சிறப்பு கண்காட்சி நாளை துவக்கம்

கோவையில் வரும் மே மாதம் 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட பைகள் மற்றும் தட்டுகள் உள்ளிட்ட பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களை நுகர்வோர்கள் மற்றும் வணிகர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக கோவை மாநகராட்சி சார்பில் 'மை ஷாப்பிங், மை பேக்' என்ற கண்காட்சி நடைபெற உள்ளது. 



நாளை (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் ஆர்.எஸ்.புரம் மாநகராச்சி கலையரங்கத்தில் நடைபெற உள்ள இக்கண்காட்சியை கோவை மாநகரட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் தொடங்கி வைக்கிறார். மார்ச் 25 மற்றும் 26-ம் தேதிகளில் நடைபெறும் இக்கண்காட்சி காலை 11 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெறும் என்றும் இக்கண்காட்சியை பார்வையிட எவ்வித கட்டணங்களும் செலுத்த தேவை இல்லை என்றும் மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இக்கண்காட்சி குறித்து ராக் அமைப்பின் தலைவர் ரவீந்திரன் கூறியதாவது :- 

வணிக நிறுவனங்கள், சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் பிளாஸ்டிக்கால் ஆன பைகள், குவளைகள், தட்டுகள் உள்ளட்ட பொருட்கள் ஒருமுறை பயன்படுத்திய பின்னர் தூக்கியெறியப்பட்டு வருகின்றன. இவ்வாறான பொருட்கள் மண்ணில் மக்காமல் இருந்து நில வளத்தையும், நீர்வளத்தையும் கெடுக்கிறது. மேலும், மழைக் காலங்களில் சாக்கடைகளுக்குள் சிக்கும் பிளாஸ்டிக் பைகள் கழிவு நீர் வழிப் பாதையை அடைத்துவிடுகின்றன. இதனால் கழிவு நீர் சாலைகளில் ஓடும் அவல நிலை ஏற்பட்டுவிடுகிறது. 

இவை தவிர மேலும் பல்வேறு பிரச்சனைகள் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படுகிறது. இதை தடுக்க பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப்பொருட்களை கோவைக்கு கொண்டுவர மாநகராட்சி முடிவு செய்தது. மாநகராட்சியின் இந்த திட்டத்திற்கு ராக் உள்ளிட்ட பல்வேறு சமூக நல அமைப்புகள் சில ஆலோசனைகள் வழங்கின. அதன்படி நாளை மாற்றுப் பொருட்களுக்கான 'மை ஷாப்பிங், மை பேக்' கண்காட்சி நடைபெறுகிறது.



பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடத்தப்படும் இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம். கோவையில் வரும் மே-1 ம் தேதி முதல் பிளாஸ்டிகால் தயாரிக்கப்படும் பைகள் மற்றும் தட்டுகளுக்கு தடைவிதிக்கப்படுகிறது. இந்த சூழலில் மாற்றுப் பொருட்களுக்கான தேவைகள் அதிகரிக்கும். அதன்படி, துணிப்பைகள், மரத்தாலான ஸ்பூன்கள், மட்டைத் தட்டுகள் மற்றும் நாரினால் செய்யப்பட்ட உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் 30-க்கும் மேற்பட்ட ஸ்டால்களில் இடம்பெறவுள்ளன. மேலும், இந்த பொருட்களை தயாரிப்பதற்கான இயந்திரங்களும் இதில் இடம் பெற உள்ளன. 



புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கும், இதுபோன்ற பொருட்களை விநியோகம் செய்ய நினைப்பவர்களுக்கும் 'மை ஷாப்பிங், மை பேக்' கண்காட்சி பயனுள்ளதாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...