பொள்ளாச்சியில் மரக்கன்றுகள் வழங்கி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் கொண்டாட்டம்

பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில் புதிய பேருந்து நிலையம் முன்பு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவரின் உருவப்படத்திற்கு பொள்ளாச்சி நகர மன்ற உறுப்பினர் சியாமளா நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.


கோவை: சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127 வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில் புதிய பேருந்து நிலையம் முன்பு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் திரு உருவப்படத்திற்கு பொள்ளாச்சி நகர மன்ற உறுப்பினர் சியாமளா நவநீதகிருஷ்ணன், பொள்ளாச்சி நகர அதிமுக செயலாளர் கிருஷ்ணகுமார், எம்ஜிஎம் கல்லூரியின் முதல்வர் முத்துக்குமரன் உள்ளிட்ட திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செய்தனர். என்.ஜி.எம் கல்லூரி வரலாற்று துறை மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் மரக்கன்றுகளும், இனிப்புகளும் வழங்கப்பட்டது.



தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவையின் தலைவர் வெள்ளை நட்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் செயலாளர் மணிகண்டன், துணை செயலாளர் அமுதன், பொருளாளர் சுபீர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...