பொள்ளாச்சியில் மரக்கன்றுகள் வழங்கி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் கொண்டாட்டம்

பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில் புதிய பேருந்து நிலையம் முன்பு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவரின் உருவப்படத்திற்கு பொள்ளாச்சி நகர மன்ற உறுப்பினர் சியாமளா நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.


கோவை: சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127 வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில் புதிய பேருந்து நிலையம் முன்பு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் திரு உருவப்படத்திற்கு பொள்ளாச்சி நகர மன்ற உறுப்பினர் சியாமளா நவநீதகிருஷ்ணன், பொள்ளாச்சி நகர அதிமுக செயலாளர் கிருஷ்ணகுமார், எம்ஜிஎம் கல்லூரியின் முதல்வர் முத்துக்குமரன் உள்ளிட்ட திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செய்தனர். என்.ஜி.எம் கல்லூரி வரலாற்று துறை மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் மரக்கன்றுகளும், இனிப்புகளும் வழங்கப்பட்டது.



தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவையின் தலைவர் வெள்ளை நட்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் செயலாளர் மணிகண்டன், துணை செயலாளர் அமுதன், பொருளாளர் சுபீர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...