கிரீன் பீல்டு பகுதியில் யானைகள் கூட்டம் உலா - தகர செட்டுகளை உடைத்ததால் மக்கள் அச்சம்

துடியலூர் அருகே உள்ள கதிர்நாயக்கன்பாளையம் லட்சுமி நகர் பேஸ்3, டி.கே.ஜி.நகர், ரேணுகா புரம், கிரீன் பீல்டு உள்ளிட்ட நகர் பகுதிகளில் இரவு நேரங்களில் உணவு தேடி காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து அங்குள்ள வாழைமரம், தென்னை மரம், செடி, கொடிகளை தின்றுவிட்டுச் செல்கின்றன.


கோவை: கோவை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய ஆனைகட்டி மலைப் பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவைகள் உணவு தேடி அவ்வப்போது மலை அடிவாரப் பகுதிகளான, மாங்கரை, தடாகம், வீரபாண்டி, பன்னிமடை, கதிர்நாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் வருகின்றன. மேலும் அருகில் உள்ள தோட்டங்களில் புகுந்து தென்னை மற்றும் வாழை மரங்களை சேதப்படுத்தி வருகின்றன.

இதன் காரணமாக இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் அச்சத்தில் உள்ளனர்.



இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக துடியலூர் அருகே உள்ள கதிர்நாயக்கன்பாளையம் லட்சுமி நகர் பேஸ் 3, டி.கே.ஜி.நகர், ரேணுகா புரம், கிரீன் பீல்டு உள்ளிட்ட நகர் பகுதிகளில் இரவு நேரங்களில் உணவு தேடி காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து அங்குள்ள வாழைமரம், தென்னை மரம், செடி, கொடிகளை தின்றுவிட்டுச் செல்கின்றன.

இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக கிரீன் பீல்டு பகுதியில் யானை கூட்டம் உலா வந்ருகின்றன. இதில் நேற்று இரவு வந்த 3 யானைகள் கொண்ட காட்டு யானைக் கூட்டம் அங்கு கட்டடப் பணியாளர்கள் தங்கியிருந்த தகர செட்டுகளை உடைத்தெந்தது. அப்போது அருகில் இருந்தவர்கள் சத்தம் போடவே அதில் குழந்தைகளுடன் தங்கியிருந்தவர்கள் உயிருக்கு பயந்து தப்பி ஓடி உயிர் தப்பினர்.

இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...