கிரீன் பீல்டு பகுதியில் யானைகள் கூட்டம் உலா - தகர செட்டுகளை உடைத்ததால் மக்கள் அச்சம்

துடியலூர் அருகே உள்ள கதிர்நாயக்கன்பாளையம் லட்சுமி நகர் பேஸ்3, டி.கே.ஜி.நகர், ரேணுகா புரம், கிரீன் பீல்டு உள்ளிட்ட நகர் பகுதிகளில் இரவு நேரங்களில் உணவு தேடி காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து அங்குள்ள வாழைமரம், தென்னை மரம், செடி, கொடிகளை தின்றுவிட்டுச் செல்கின்றன.


கோவை: கோவை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய ஆனைகட்டி மலைப் பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவைகள் உணவு தேடி அவ்வப்போது மலை அடிவாரப் பகுதிகளான, மாங்கரை, தடாகம், வீரபாண்டி, பன்னிமடை, கதிர்நாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் வருகின்றன. மேலும் அருகில் உள்ள தோட்டங்களில் புகுந்து தென்னை மற்றும் வாழை மரங்களை சேதப்படுத்தி வருகின்றன.

இதன் காரணமாக இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் அச்சத்தில் உள்ளனர்.



இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக துடியலூர் அருகே உள்ள கதிர்நாயக்கன்பாளையம் லட்சுமி நகர் பேஸ் 3, டி.கே.ஜி.நகர், ரேணுகா புரம், கிரீன் பீல்டு உள்ளிட்ட நகர் பகுதிகளில் இரவு நேரங்களில் உணவு தேடி காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து அங்குள்ள வாழைமரம், தென்னை மரம், செடி, கொடிகளை தின்றுவிட்டுச் செல்கின்றன.

இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக கிரீன் பீல்டு பகுதியில் யானை கூட்டம் உலா வந்ருகின்றன. இதில் நேற்று இரவு வந்த 3 யானைகள் கொண்ட காட்டு யானைக் கூட்டம் அங்கு கட்டடப் பணியாளர்கள் தங்கியிருந்த தகர செட்டுகளை உடைத்தெந்தது. அப்போது அருகில் இருந்தவர்கள் சத்தம் போடவே அதில் குழந்தைகளுடன் தங்கியிருந்தவர்கள் உயிருக்கு பயந்து தப்பி ஓடி உயிர் தப்பினர்.

இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...