வால்பாறை அருகே தேயிலைத்தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகளால் தேயிலை பறிக்கும் தொழில் பாதிப்பு

டுமலை எஸ்டேட் பகுதியில் காலையில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்ய தொழிலாளர்கள் சென்றபோது,தோட்டத்தில் ஆறு காட்டு யானைகள் குட்டியுடன் உள்ளதைப்பார்த்து தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். பின்னர், வந்த வனத்துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது. காட்டு யானைகள் கூட்டமாகவும், தனியாகவும் சுற்றி வருகிறது. கால சூழ்நிலை மாற்றத்தால் காட்டு யானைகள் வால்பாறை பகுதியில் இருந்து கேரளா வனப் பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகிறது.

இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள நடுமலை எஸ்டேட் பகுதியில் காலை தேயிலை தோட்டத்தில் வேலை செய்ய தொழிலாளர்கள் சென்றுள்ளனர். அப்பொழுது தேயிலை தோட்டத்தில் ஆறு காட்டு யானைகள் குட்டியுடன் இன்று உள்ளது. தொழிலாளர்கள் அச்சத்தில் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்து காட்டு யானைகளை அருகில் இருக்கும் வனப்பகுதிக்குள் விரட்டினார்.

தொழிலாளர்கள் ஒரு மணி நேரம் தாமதமாக தேயிலை பறிக்கும் வேலையை ஆரம்பித்தனர். காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் இந்தப்பகுதியில் பாதுகாப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...