வால்பாறை அருகே தேயிலைத்தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகளால் தேயிலை பறிக்கும் தொழில் பாதிப்பு

டுமலை எஸ்டேட் பகுதியில் காலையில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்ய தொழிலாளர்கள் சென்றபோது,தோட்டத்தில் ஆறு காட்டு யானைகள் குட்டியுடன் உள்ளதைப்பார்த்து தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். பின்னர், வந்த வனத்துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளது. காட்டு யானைகள் கூட்டமாகவும், தனியாகவும் சுற்றி வருகிறது. கால சூழ்நிலை மாற்றத்தால் காட்டு யானைகள் வால்பாறை பகுதியில் இருந்து கேரளா வனப் பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகிறது.

இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள நடுமலை எஸ்டேட் பகுதியில் காலை தேயிலை தோட்டத்தில் வேலை செய்ய தொழிலாளர்கள் சென்றுள்ளனர். அப்பொழுது தேயிலை தோட்டத்தில் ஆறு காட்டு யானைகள் குட்டியுடன் இன்று உள்ளது. தொழிலாளர்கள் அச்சத்தில் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து வனத்துறையினர் அப்பகுதிக்கு வந்து காட்டு யானைகளை அருகில் இருக்கும் வனப்பகுதிக்குள் விரட்டினார்.

தொழிலாளர்கள் ஒரு மணி நேரம் தாமதமாக தேயிலை பறிக்கும் வேலையை ஆரம்பித்தனர். காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் இந்தப்பகுதியில் பாதுகாப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...