தாராபுரம் மற்றும் காங்கேயம் சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் வெளியீடு

தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 786 வாக்காளர்களும், காங்கேயம் பொதுத்தொகுதியில் இரண்டு லட்சத்து 59 ஆயிரத்து 652 வாக்காளர்களும் உள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதி மற்றும் காங்கேயம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் இன்று கோட்டாட்சியர் செந்திலரசன் தலைமையில் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தசாமி, காங்கேயம் வட்டாட்சியர் மயில்சாமி ஆகியோர் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட், பிஜேபி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் கலந்து கொண்டனர். அப்போது தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 786 வாக்காளர்களும், காங்கேயம் பொதுத்தொகுதியில் இரண்டு லட்சத்து 59 ஆயிரத்து 652 வாக்காளர்களும், தாராபுரம் தொகுதிக்கு உட்பட்டு மூன்றாம் பாலினத்தார் 12 பேரும் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் மூன்றாம் பாலினம் 20 பேரும் இரு தொகுதிகளிலும் சேர்த்து 32 பேர் மூன்றாம் பாலினத்தவர் சேர்க்கப்பட்டுள்ளனர் காங்கேயம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் வாக்காளர்கள் 5 லட்சத்து 18 ஆயிரத்து 438 வாக்காளர்கள் இறுதி வாக்காளர்களாக அறிவிக்கப்பட்டனர் மேலும் தேர்தல் வரவுள்ளதால் 18 வயது உள்ள வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படும் என கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...