தாராபுரம் மற்றும் காங்கேயம் சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் வெளியீடு

தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 786 வாக்காளர்களும், காங்கேயம் பொதுத்தொகுதியில் இரண்டு லட்சத்து 59 ஆயிரத்து 652 வாக்காளர்களும் உள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதி மற்றும் காங்கேயம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் இன்று கோட்டாட்சியர் செந்திலரசன் தலைமையில் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தசாமி, காங்கேயம் வட்டாட்சியர் மயில்சாமி ஆகியோர் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட், பிஜேபி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் கலந்து கொண்டனர். அப்போது தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 58 ஆயிரத்து 786 வாக்காளர்களும், காங்கேயம் பொதுத்தொகுதியில் இரண்டு லட்சத்து 59 ஆயிரத்து 652 வாக்காளர்களும், தாராபுரம் தொகுதிக்கு உட்பட்டு மூன்றாம் பாலினத்தார் 12 பேரும் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் மூன்றாம் பாலினம் 20 பேரும் இரு தொகுதிகளிலும் சேர்த்து 32 பேர் மூன்றாம் பாலினத்தவர் சேர்க்கப்பட்டுள்ளனர் காங்கேயம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் வாக்காளர்கள் 5 லட்சத்து 18 ஆயிரத்து 438 வாக்காளர்கள் இறுதி வாக்காளர்களாக அறிவிக்கப்பட்டனர் மேலும் தேர்தல் வரவுள்ளதால் 18 வயது உள்ள வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படும் என கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...