அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, உடுமலையில் நகர பாஜக சார்பில் கோவில்களில் சிறப்பு வழிபாடு

உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் தலைவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விநாயகர் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட ஐஸ்வர்யா நகர் கற்பக விநாயகர் மற்றும் செளதாம்லேஅவுட், அண்ணா குடியிருப்பு விநாயகர் கோவில், ஏரி பாளையம் தங்காதம்மாள் கோவில், தில்லை நகர் பாபா கோவில்களில் இன்று அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு விநாயகர் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.

இதே போல உழவர் சந்தை முன்பு 2000 பேருக்கு சாம்பார் சாதம் மற்றும் சக்கரை பொங்கல் வழங்கப்பட்டது. உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் தலைவர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமரகுரு, மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் ராதிகா, மாவட்ட மகளிர் அணி மாவட்ட செயலாளர் வித்யா, நகர பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், தம்பிதுரை, நகர துணைத்தலைவர் கணேஷ் ஆனந்த், கண்ணப்பன், உமாகுப்புசாமி, நகர செயலாளர் செல்வராஜ், மத்திய நலத்திட்ட பிரிவு நகரத் தலைவர் திருஞானம், மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் குருசாமி, விளையாட்டு துறை நகர தலைவர் வைர பிரகாஷ், உடுமலை வடக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் ஆரியபவன் ரவி, வர்த்தக பிரிவு நகரத் தலைவர் பொன் பெருமாள், நாடார் பேரவை நிர்வாகிகள் சேர்மன் பட்டு ராஜா, தாமோதரன், சக்திவேல் நாடார், குருசாமி, சுடலைமணி, நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...