கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வால்பாறையில் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு முகாம்

பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு முகாமில் சுமார் 10,000 மேற்பட்ட பொதுமக்கள் புதிதாக மருத்துவ காப்பீடு பெற்றுக் கொண்டனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் சுமார் 50 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் முக்கிய வாழ்வாதாரமாக தேயிலை தோட்டம் தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர்.



இவர்களுக்கு மருத்துவ வசதிகள் குறைவு, கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு முகாம் மற்றும் புதிய மகளிர் சுயஉதவி குழு மற்றும் சிறு குரு வியாபரிகளுக்கு வங்கி கடன் சமந்தமான முகாம் வால்பாறையில் 20ம் தேதி சனி மற்றும் 21ம் தேதி ஞாயிறு கிழமைகளில் 01, 02, 03, 04, 09, 11, 12, 16 ஆகிய வார்டுகளிலும், சோலையார் அணை அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் வார்டு எண் 05, 06, 07, 08, 18. ஆகிய வார்டுகளிலும் 10, 13, 14, 15, 17, 19, 20, 21 ஆகிய வார்டுகளில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையில், மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையிலும் வால்பாறை நகராட்சி நிர்வாகத்தின் மூலம் நடைபெற்றது.



முகாமில் வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் இருந்து எஸ்டேட் பகுதியில் இருந்தும் பொதுமக்கள் வந்து முகாம் காப்பீடு பதிவு செய்து பயன்பட்டனர். இதில் ஏற்கனவே முகாம் மருத்துவ காப்பீடு வைத்திருப்பவர்கள் புதிதாக நினைவு செய்து புதுப்பித்து பயன்பட்டனர். சுமார் 10,000 மேற்பட்ட பொதுமக்கள் முகாமில் புதிதாக மருத்துவ காப்பீடு பெற்றுக் கொண்டனர்.



இதில் பொள்ளாச்சி சார் ஆட்சியர், வால்பாறை நகராட்சி நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி, துணை தலைவர் செந்தில்குமார் மற்றும் திமுக நகரச் செயலாளர் சுதாகர், வார்டு கவுன்சிலர் ஜே.பி.ஆர். அன்பரசன், செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...

நிலம் வாங்குவது போல நடித்து ரியல் எஸ்டேட் நபரிடம் 6 பவுன் தங்க செயின் பறிப்பு; மூவர் கைது

கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவக்குமாரிடம் வீடு காட்டுவதாக கூறி பொன்னூத்து அம்மன் கோவில் பகுதிக்...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா, IAS பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, IAS, இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 30-வது...

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...