கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வால்பாறையில் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு முகாம்

பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு முகாமில் சுமார் 10,000 மேற்பட்ட பொதுமக்கள் புதிதாக மருத்துவ காப்பீடு பெற்றுக் கொண்டனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் சுமார் 50 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் முக்கிய வாழ்வாதாரமாக தேயிலை தோட்டம் தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர்.



இவர்களுக்கு மருத்துவ வசதிகள் குறைவு, கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு முகாம் மற்றும் புதிய மகளிர் சுயஉதவி குழு மற்றும் சிறு குரு வியாபரிகளுக்கு வங்கி கடன் சமந்தமான முகாம் வால்பாறையில் 20ம் தேதி சனி மற்றும் 21ம் தேதி ஞாயிறு கிழமைகளில் 01, 02, 03, 04, 09, 11, 12, 16 ஆகிய வார்டுகளிலும், சோலையார் அணை அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் வார்டு எண் 05, 06, 07, 08, 18. ஆகிய வார்டுகளிலும் 10, 13, 14, 15, 17, 19, 20, 21 ஆகிய வார்டுகளில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையில், மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையிலும் வால்பாறை நகராட்சி நிர்வாகத்தின் மூலம் நடைபெற்றது.



முகாமில் வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் இருந்து எஸ்டேட் பகுதியில் இருந்தும் பொதுமக்கள் வந்து முகாம் காப்பீடு பதிவு செய்து பயன்பட்டனர். இதில் ஏற்கனவே முகாம் மருத்துவ காப்பீடு வைத்திருப்பவர்கள் புதிதாக நினைவு செய்து புதுப்பித்து பயன்பட்டனர். சுமார் 10,000 மேற்பட்ட பொதுமக்கள் முகாமில் புதிதாக மருத்துவ காப்பீடு பெற்றுக் கொண்டனர்.



இதில் பொள்ளாச்சி சார் ஆட்சியர், வால்பாறை நகராட்சி நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி, துணை தலைவர் செந்தில்குமார் மற்றும் திமுக நகரச் செயலாளர் சுதாகர், வார்டு கவுன்சிலர் ஜே.பி.ஆர். அன்பரசன், செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...