கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி நகராட்சியில் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம்

முகாமில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் சேர்த்தல், இலவச மருத்துவ உதவி திட்டம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்து கடன் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விண்ணப்பங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.


கோவை: பொள்ளாச்சி நகராட்சி 26, 31, 32 வார்டுக்கு உட்பட்ட பககுதியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம் நடைபெற்றது. கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வார்டு வாரியாக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பத்ரகாளியம்மன் கோவில் வீதியில் உள்ள ஜெயசூர்யா மண்டபத்தில் 26, 31, 32வார்டு பகுதிக்கான முகாம் நடைபெற்றது. இந்த முகாமை நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். முகாமில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் சேர்த்தல், இலவச மருத்துவ உதவி திட்டம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்து கடன் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விண்ணப்பங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் திமுக நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், நகர மன்ற உறுப்பினர் பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...