கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி நகராட்சியில் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம்

முகாமில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் சேர்த்தல், இலவச மருத்துவ உதவி திட்டம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்து கடன் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விண்ணப்பங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.


கோவை: பொள்ளாச்சி நகராட்சி 26, 31, 32 வார்டுக்கு உட்பட்ட பககுதியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம் நடைபெற்றது. கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வார்டு வாரியாக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பத்ரகாளியம்மன் கோவில் வீதியில் உள்ள ஜெயசூர்யா மண்டபத்தில் 26, 31, 32வார்டு பகுதிக்கான முகாம் நடைபெற்றது. இந்த முகாமை நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். முகாமில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் சேர்த்தல், இலவச மருத்துவ உதவி திட்டம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்து கடன் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விண்ணப்பங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் திமுக நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், நகர மன்ற உறுப்பினர் பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...