ஐஸ்கிரீம் குச்சியில் ஆயிரத்து 330 திருக்குறளை எழுதி பொள்ளாச்சியை சேர்ந்த ஆசிரியை அசத்தல்

தமிழ் மொழி மீதும் திருக்குறள் மீதும் அதிகம் பற்று கொண்ட ஆசிரியர் கீதா, திருக்குறளையும் அதில் உள்ள வாழ்க்கை முறை கருத்துக்களையும் மாணவர்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் ஆயிரத்து 330 திருக்குறளை நோட்டில் எழுதி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள சின்னாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கீதா. அறிவியல் பட்டதாரி ஆசிரியரான இவர் பொள்ளாச்சி அருகே உள்ள ஏரிப்பட்டி அரசு பள்ளியில் பணியாற்றி வருகிறார்.

தமிழ் மொழி மீதும் திருக்குறள் மீதும் அதிகம் பற்று கொண்ட ஆசிரியர் கீதா, திருக்குறளையும் அதில் உள்ள வாழ்க்கை முறை கருத்துக்களையும் மாணவர்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் ஆயிரத்து 330 திருக்குறளை நோட்டில் எழுதி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் தன்னால் பயின்று வரும் மாணவர்களும் மட்டுமல்ல, அனைத்து தரப்பு மாணவர்களும், பொது மக்களும் திருக்குறள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ஐஸ் கிரீம் குச்சியில் ஆயிரத்து 330 திருக்குறளை எழுதி பல்வேறு இடங்களில் நடைபெறும் கண்காட்சியில் வைத்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழக கல்வித்துறை சார்பில் தென்கொரியாவில் தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற வானவில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அறிவியல் பட்டதாரி ஆசிரியர் கீதா, தான் ஐஸ்கிரீம் குச்சியில் எழுதிய ஆயிரத்து 330 திருக்குறளில் 650 திருக்குறளை எழுதிய குச்சியை தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி மூலம் தென் கொரியா தமிழ் சங்கத்திற்கு பரிசாக வழங்கினார்.

மீதமுள்ள ஐஸ்கிரீம் குச்சியில் எழுதிய திருக்குறளை மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சியாக ஆங்காங்கே வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். கொரோனா முழு அடைப்பு காலத்தில் பள்ளிகள் விடுமுறை நாட்களில் வீட்டிலிருந்து மாணவர்களுக்கு பாடம் எடுத்ததற்காக தமிழக அரசு சார்பில் நல்லாசிரியர் விருதும் கடந்த 2021 ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ளது.

உலகப் பொதுமறையான திருக்குறளில் சொல்லாத கருத்துக்களை இல்லை. அந்த கருத்துக்கள் குறித்து மாணவர்கள், பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் ஐஸ்கிரீம் குச்சியில் திருக்குறளை எழுதி இருப்பதாகவும், மாணவர்களுக்கு திருக்குறளை மனப்பாடம் செய்ய வைக்கும் முயற்சியில் ஐஸ்கிரீம் குச்சியில் எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக ஆசிரியர் கீதா தெரிவித்தார்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...