துடியலூர் ஆர்.டி.ஒ அலுவலகம் அருகில் ரூ.6.80 லட்சம் மதிப்பில் சிமெண்ட் கான்கீரிட் தளம் பணி தொடங்கி வைப்பு

அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் ஆகியோர் தலைமை தாங்கி புதிய சிமெண்ட் கான்கீரிட் தளம் அமைக்கும் பணியினை பூமி பூஜை செய்து வேலையை தொடங்கி வைத்தனர்.


கோவை: கோவை மாநகராட்சி 2வது வார்டுக்குட்பட்ட துடியலூர் ஆர்.டி.ஒ அலுவலகம் அருகில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் ரூ.6.80 லட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் கான்கீரிட் தளம் அமைக்கும் பணியினை எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி. அருண்குமார் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி 2வது வார்டுக்குட்பட்ட துடியலூர் ஆர்.டி.ஒ அலுவலகம் அருகில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் ரூ.6.80 லட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் கான்கீரிட் தளம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. இதற்கு சின்னவேடம்பட்டி பகுதி 2வது வார்டு செயலாளர்கள் ஜெயகுமார், காளிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து வேலையை தொடங்கி வைத்தார்.



தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

அப்போது பெண் தொண்டர் ஒருவர் சட்ட மன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் பாடலை பாடினார். இந்த பூமி பூஜையில் அம்மாபேரவை பகுதி செயலாளர் கவிசந்திரமோகன், வார்டு கவுன்சிலர்கள் சாந்திபூசன், பந்தல்வீடு பிரகாஷ், சுரேஷ்குமார், பகுதி துணை செயலாளர் சரவணபாண்டியன், துணை செயலாளர் கோமதி, பகுதி அவைத்தலைவர் ஐ.டி.ஐ.ஜெயராஜ், அண்ணா தொழிற்சங்க பகுதி செயலாளர் முருகேஷ், பகுதி வணிக பேரவை தலைவர் செல்வம், 2வது வார்டு அவைத்தலைவர் செல்வராஜ், பொருளாளர் திருநாவுக்கரசு, சி.டி.சி பேபி, சி.டி.சி சிவலிங்கம், சி.டி.ஐ கோபி, பாலாஜி, மோகன்ராஜ், மணி, மைதிலி ஜெயந்தி உட்பட பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...