குன்னூர்- மேட்டுப்பாளையம் இடையே மண்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிப்பு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்லும் பிரதான சாலையில் குறுந்தாடி என்னும் பகுதியில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் மண் சரிவு ஏற்பட்டது. 



இதனால், குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் வரும் வாகனப் போக்குவரத்தும், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்லும் வாகனப் போக்குவரத்தும் சுமார் மூன்று மணிநேரம் ஸ்தம்பித்தது.



மண்சரிவு குறித்த தகவலறிந்த குன்னூர் கோட்டாட்சியர் சீதா பிரியா மற்றும் வருவாய் துறை அலுவலர் வசந்த் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதைத்தொடர்ந்து, மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள மண்சரிவினை அகற்றும் பணியில் ஈடுபட்ட தீயனைப்புத் துறையினர் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் சாலையில் இருந்த மண்களை அகற்றினர். இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் போக்குவரத்து சீரடைந்தது.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், கடந்த ஒரு வாரத்திற்கு மூன்பு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேலாக குன்னூர், நீலகிரி, உதகை உட்பட்ட பகுதிகளில் மழை பெய்தது. அதனைத்தொடர்ந்து நிலவிவந்த வெயிலின் காரணமாக மண்ணின் ஈரம் உறிஞ்சப்பட்டதால் தற்போது இவ்வாறான மண் சரிவு ஏற்பட்டுள்ளது' என்றனர்.

முன்னதாக, மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் எவ்வித வாகனங்களும் கடக்காததால் பெரிய அளவிலான உயிர்சேதம் மற்றும் பொருட்சேதங்கள் தடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...