ஊத்துகாடு ரோட்டில் உள்ள விநாயகர் கோவிலை அகற்ற எதிர்ப்பு - நகராட்சி ஆணையர் முற்றுகை

சாலையை ஆக்கிரமித்து கட்டியுள்ளதாக விநாயகர் கோவிலை அகற்ற உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது சம்பந்தமாக விசாரித்த உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் 15 தினங்களுக்குள் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் கோவிலை அகற்ற வேண்டும் என தீர்ப்பு அளித்துள்ளது.


கோவை: பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட ஊத்துகாடு ரோட்டில் உள்ள விநாயகர் கோவில் அகற்றாவிட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியதை திரும்ப பெற கோரி எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட அதிமுகவினர் நகராட்சி ஆணையரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்காடு ரோடு நல்லிக்கவுண்டர் லே அவுட் சந்திப்பில் சாலையை ஆக்கிரமித்து கட்டியுள்ளதாக விநாயகர் கோவிலை அகற்ற உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது சம்பந்தமாக விசாரித்த உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் 15 தினங்களுக்குள் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் கோவிலை அகற்ற வேண்டும் என தீர்ப்பு அளித்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக நகராட்சி நிர்வாகம் சார்பில் கோவிலை அகற்றக்கோரி சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.



அந்த நோட்டீஸில் 15 தினங்களுக்குள் கோவிலை அகற்றாவிட்டால் மூன்று ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என கூறப்பட்டிருந்ததை கண்டித்து இன்று பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், பொள்ளாச்சி நகர அதிமுக செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில், ஊத்துக்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்களுடன் பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளர் சுப்பையாவை சந்தித்து விநாயகர் கோவிலை அகற்ற கோரிய நோட்டீசை திரும்ப பெற வலியுறுத்தி மனு அளித்தனர்.



மேலும் ஒரு சில ஆளுங்கட்சியினர் தூண்டுதலால் இது போன்ற நடவடிக்கை யில் ஈடுபடுவதை நகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் கைவிட வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



தொடர்ந்து செய்தியாளிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடப்பதாகவும், பல ஆண்டுகளாக பொதுமக்கள் வழிபட்டு வரும் விநாயகர் கோவிலை இடிக்க கூடாது, தொடர்ந்து அதிகாரிகள் இது போன்ற செயலில் ஈடுபட்டால் அதிமுக சார்பில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...

சென்னை-கோவை விமானக் கட்டணம் ரூ.16,500 ஆக உயர்வு: தொடர் விடுமுறை காரணம்

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சென்னை-கோவை விமான கட்டணம் ரூ.4,966-இலிருந்து ரூ.16,496 ஆக பல...

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளி ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் ஊர்வலம் நடைபெற்றது. இயேசு சிலுவையைச் சுமந்து செல்லும்...

ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நெசவாளர்கள் கூட்டமைப்பு - இலவச மின்சாரம் வேண்டும்

ஈரோட்டில் தமிழக நெசவாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து மனு அளித்தனர். கைத்தறி மற்றும் விசைத்தறி...

நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து இலவச மின்சாரம் வழங்க மனு

Erode மாவட்டத்தில் முதல்வர் Stalin ஐ சந்தித்த தமிழ்நாடு நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள், தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்ற இ...