திருப்பூரில் மக்கள் நல மன்றத்தின் சார்பில் திருவள்ளுவர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவரின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சீனியம்மாள், தொழில் அதிபர் மகேந்திரன் ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


திருப்பூர்: திருப்பூரில் மக்கள் நல மன்றத்தின் சார்பில் 20வது ஆண்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு திருவள்ளுவர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

திருப்பூர் பினலாடைக்கு பிரசித்தி பெற்ற நகரமாகும். இங்கு சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்னலாடை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தைத்திருநாள் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று பின்னலாடை நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள மக்கள் நல மன்றத்தின் சார்பில் இருபதாம் ஆண்டு மூன்று நாட்கள் பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது.



இரண்டாம் நாளான திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவரின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சீனியம்மாள், தொழில் அதிபர் மகேந்திரன் ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



தொடர்ந்து பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கி பொங்கல் விழாவினை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். மேலும் திருப்பூரில் வசிக்கும் இப்பகுதி மக்களுக்கு மக்கள் நல மன்றத்தின் சார்பில் நடைபெற்று வரும் பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள் அப்பகுதியில் பெரும் வரவேற்பை கொடுத்துள்ளது.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...