அமராவதி ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தினற்கு அமைச்சர் கயல்விழி ஆறுதல்

ஆன்மீக சுற்றுலாவுக்கு சென்று விட்டு மதுரை செல்லும் வழியில் தாராபுரம் புறவழிச்சாலை அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்று சின்னகருப்பு, பாக்கியராஜ், ஹரி ஆகிய மூன்று பேர் பாறை இடுக்குகளில் சிக்கி உயிரிழந்தனர்.


திருப்பூர்: அமராவதி ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த மூன்று பேர் குடும்பத்திற்கு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆறுதல் தெரிவித்தார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஈஷா யோகா மைய ஆன்மீக சுற்றுலாவுக்கு சென்று விட்டு மதுரை செல்லும் வழியில் தாராபுரம் புறவழிச்சாலை அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்று சின்னகருப்பு, பாக்கியராஜ், ஹரி ஆகிய மூன்று பேர் பாறை இடுக்குகளில் சிக்கி உயிர் இழந்தனர்.



உயிரிழந்த மூன்று பேர்களின் உடல்களை தாராபுரம் தீயணைப்புத் துறையினர் மீட்டெடுத்து ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த துயர சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.



இந்த நிலையில் உள்ளூரில் இருந்த (தாராபுரம்) ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி சம்பவத்தை கேள்விப்பட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்து உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார் அப்பொழுது, உயிரிழந்த மூன்று பேரின் உறவினர்கள் அமைச்சரின் காலில் விழுந்து கதறி அழுதனர்.

இதனால் கண்கலங்கிய ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி மருத்துவர் அழைத்து பேசினார். அப்போது மூன்று பேர்களின் உடல்களையும் விரைவாக உடற்கூறு ஆய்வு செய்து தரும்படி மருத்துவர்களை வலியுறுத்தினார்.



இறந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் அவர்களுக்கு வேண்டிய உதவியை செய்து கொடுத்தார். அமராவதி ஆற்றில் நீரில் மூழ்கி மூன்று பேர் உயிரிழப்பு சம்பவத்தால் தாராபுரம் அரசு மருத்துவமனை வளாகமே பெரும் சோகமாக காணப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...