தாராபுரத்தில் பூர்வகுடி வள்ளுவர் சமுதாயத்தின் சார்பில் திருவள்ளுவர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

தாராபுரத்தில் பூர்வகுடி வள்ளுவர் சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பத்தினர், திருவள்ளுவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இந்தவிழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் பொங்கல் வழங்கப்பட்டது.


திருப்பூர்: அய்யன் திருவள்ளுவரின் 2055 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் வாழும் வள்ளுவர் குல இளைஞர் நலச் சங்கத்தின் சார்பில், சமுதாய பொங்கல் விழா நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பூர்வ குடி வள்ளுவர் சமுதாயத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இச்சமுதாயத்தின் சார்பில் ஆண்டுதோறும் திருவள்ளுவர் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.



அதன் அடிப்படையில் 2024 ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி, தாராபுரத்தில் பூர்வ குடி வள்ளுவர் சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பத்தினர், திருவள்ளுவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.



விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் பொங்கல் வழங்கப்பட்டது. இவ்விழாவினை வாழும் வள்ளுவர் குலஇளைஞர் நலச்சங்கத்தின் தலைவர் ஓம்.பிரகாஷ், துணைத் தலைவர் கார்வேந்தன், செயலாளர் பிரபாகரன், துணைச் செயலாளர் மோகன், பொருளாளர் பிரகாஷ் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...