திமுக அரசு விலை வாசியை கட்டுப்படுத்த தவறிவிட்டது - பொள்ளாச்சியில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் புகார்

நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் துணை சபாநாயக்கருமான பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


கோவை: முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழாவை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நகர அதிமுக சார்பில் மத்திய பேருந்து நிலையம் அருகே எம்ஜிஆர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.



நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் துணை சபாநாயக்கருமான பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.



நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த பேட்டியின் போது, திமுக ஆட்சியில் எங்கும் ஊழல். எதிலும் ஊழல். கமிஷன், கலெக்சன், கரப்ஷன் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் மு.க.ஸ்டாலின் ஆட்சி. மக்களுக்கான நல்ல காரியங்களை அரசு செய்வதில்லை. இந்த ஆட்சியின் மீது மக்கள் கோபமடைந்துள்ளனர்.

எழுதாத பேனாவுக்கு ரூ.80 கோடி. ஓடாத கார் ரேஸுக்கு ரூ.44 கோடி நிதி ஒதுக்கும் அரசு, மக்கள் நலனில் அக்கறை இருந்திருந்தால் வெள்ள நிவாரண நிதியை சேர்த்து கொடுத்திருக்கலாம். விலைவாசி ஏற்றத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சவால் விட்டு தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்கும் ஆட்சியாக இந்த ஆட்சி செயல்படுகிறது என குற்றம் சாட்டினார்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...