உடுமலையில் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம் - நாட்டு இன மாடுகளை வளர்க்க விவசாயிகள் கோரிக்கை

திருமூர்த்தி மலை, பொன்னாலம்மன் சோலை, தளி, ஜல்லிப்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய முறையில் சூரிய பொங்கல், பூமாதேவி பொங்கல், மாட்டுப் பொங்கல் என மூன்று வகை பொங்கல் வைத்து கிராம மக்கள் மகிழ்ந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலை, பொன்னாலம்மன் சோலை, தளி, ஜல்லிப்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் மாட்டுப் பொங்கல் பாரம்பரியமான முறையில் சூரிய பொங்கல், பூமாதேவி பொங்கல், மாட்டுப் பொங்கல் என மூன்று வகை பொங்கல் வைத்து வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.



இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, வருடம் முழுவதும் கால்நடைகள் விவசாயிகளுக்காக உழைத்து வரும் நிலையில், மாட்டுப்பொங்கல் தினத்தன்று கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக முன்னோர்கள் கூறிய இந்த அறிவுரையின் படி மாடுகளைக் குளிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம் பூசி அலங்கரித்து மாட்டுக்கு பிடித்த உணவு வகைகள் வழங்கி மாட்டுப்பொங்கலை பாரம்பரியமான முறையில் கொண்டாடி வருகின்றோம்.



மேலும், தற்சமயம் பெரும்பாலும் அனைவரும் கலப்பின மாடுகளை வைத்துள்ள நிலையில் நாட்டு மாடுகள் வளர்க்க அனைத்து விவசாயிகளும் முன்வர வேண்டும். இதற்கு தமிழக அரசு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தனர். இந்தநிகழ்வில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...