பொள்ளாச்சி அருகே உள்ள மணக்கடவு வாணவராயர் வேளாண்மை கல்லூரியில் மூன்று நாட்களாக பொங்கல் விழா கொண்டாட்டம்

பொங்கல் விழாவில், ஏறு தழுவுதல், முறுக்கு கடித்தல், அம்மி அரைத்தல், உலக்கை குத்துதல், கரும்பு கடித்தல், பூமாலை கோர்த்தல், ரங்கோலி வண்ணக் கோலங்கள் இடுதல் மற்றும் களிமண் சிற்பம் செய்தல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள மணக்கடவு வாணவராயர் வேளாண்மை கல்லூரியில் கடந்த மூன்று நாட்களாக தமிழர் திருநாளாம் பொங்கல் பெரு விழா நடைபெற்றது.

பொங்கல் சிறப்பு விழாவில் முதலாம் நாளில் (11.01.2024) கிராமப்புற சமையல் மற்றும் விளையாட்டு போட்டியான கபடி போட்டி நடைபெற்றது.



இரண்டாம் நாள் அன்று (12.01.2024) ஏறு தழுவுதல், முறுக்கு கடித்தல், அம்மி அரைத்தல், உலக்கை குத்துதல், கரும்பு கடித்தல், பூமாலை கோர்த்தல், ரங்கோலி வண்ணக் கோலங்கள் இடுதல் மற்றும் களிமண் சிற்பம் செய்தல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

பிற்பகலில் மேலும் இவ்விழாவை சிறப்பிக்குமாறு சிறப்பு விருந்தினராக முனைவர் பி.பாலசுப்ரமணியம், இயக்குனர், இயற்கை வள மேலாண்மை இயக்குனரகம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை மற்றும் சிறப்பு பேச்சாளராக முனைவர் சொ.சேதுபதி, இனைபேராசிரியர் பாரதிதாசன், அரசினர் மகளிர் கல்லூரி, புதுச்சேரி இவ்விழாவில் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து வரலாற்று சிறப்புமிக்க நாடகங்களிலும், பாரம்பரிய நடனங்களிலும் மாணவ,மாணவியர் பங்கேற்றனர்.

அதனைத்தொடர்ந்து, "கடவுள்களின் வேடம்" அணிந்து நடனமாடிய மாணவ மாணவிரை பார்த்து பார்வையாளர்கள் வியப்படைந்தனர்.மாலையில் நடந்து முடிந்த பட்டி பொங்கல், மற்றும் முளைப்பாரி எடுத்தல், ரேக்ளா கண்காட்சி, சேவல் கண்காட்சி, கும்மி, மாரியம்மன் நடனம் ஆகிய நிகழ்வுகளில் மாணவ மாணவியர் பங்கேற்றனர்.



இரவு வெளியிலிருந்து அழைத்து வரப்பட்ட பாரம்பரிய கலை குழுவினர்களின் வள்ளி கும்மியாட்டம் மற்றும் திரன்கலை கலைக் குழுவின் கம்பத்து நடனம் நடைப்பெற்றது.



பொங்கல் கொண்டாட்டத்தின் மூன்றாம் நாள் (13.01.2024)அன்று பொங்கல் வைத்தல், தேங்காய் சுடுதல், கயிறு இழுத்தல், உறியடித்தல் மற்றும் வழுக்கு மரம் ஏறுதல் ஆகிய போட்டிகளில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட சுமார் 700 பேர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் வாணவராயர் வேளாண்மை கல்லூரியின் தாளாளர்கற்பகவள்ளி ராஜ்குமார், கல்லூரி இயக்குநர் முனைவர் கெம்புசெட்டி, கல்லூரி முதல்வர் முனைவர் பிரபாகர் ஆஇயோரின் முன்னிலையில், கல்லூரி மாணவ மன்ற ஆலோசகர் முனைவர்.ரவிகுமார் ஆலோசனை படி மாணவ மன்ற தலைவர் மாணவன் அகிலேஷ் மற்றும் இம்மன்ற மற்ற மாணவர்கள் இனைந்து இவ்விழாவை மிக சிறப்பாக வழி நடத்தினர்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...