தடாகம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

தடாகம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தலைமையில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினராக பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம் தனது மனைவியுடன் கலந்துக்கொண்டார்.


கோவை: கோவை தடாகம் காவல் நிலையத்தில் கொண்டாடப்பட்ட சமத்துவப் பொங்கல் விழாவில் பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் உள்பட அனைத்து காவலர்களும் ஒரே மாதிரியான வேட்டி சட்டை அணிந்து பொங்கல் வைத்து மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

கோவை மாவட்ட காவல்துறைக்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் பொங்கல் விழா வெகு விமர்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கணுவாய் அடுத்துள்ள தடாகம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இதற்கு தடாகம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம் தனது மனைவியுடன் கலந்துக்கொண்டார். காவல்நிலையத்திலுள்ள அனைத்து காவலர்களுக்கும் ஒரே மாதிரியான பாரம்பரிய வேட்டி – சட்டை அணிந்து பொங்கலை கொண்டாடினர்.

தொடர்ந்து ஊர்பொதுமக்களுடன் இணைந்து சர்க்கரை பொங்கல் வைக்கப்பட்டது. பொங்கல் பொங்கும்போது காவல்துறையினர் பொங்கலோ பொங்கல் என கோசமிட்டனர்.

பின்னர் இலையில் பொங்கல் படையிலிட்டு தேங்காய் உடைத்து சூரிய பகவானுக்கு நன்றி கூறி அனைவரும் சாமி கும்மிட்டனர். அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. தொடர்ந்து பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் காவலர்கள் ஆர்வமுடன் கரும்புகளை பல்லால் கடித்து சுவைத்து மகிழ்ந்தனர்.



இதில் எஸ்.ஐ. ஜீவன்ராஜ்துரை, எஸ்.ஐ.ஐயாசாமி, பெரியநாயக்கன்பாளையம் தனிபிரிவு எஸ்.ஐ ஐயப்பன், எஸ்.எஸ்.ஐ அந்தோனிசாமி, தலைமை காவலர்கள் முருகன், முருகேசன், தனிப்பிரிவு போலீஸ் செல்லக்கண்ணு, காவலர்கள் ஜனக்குமார், ராமராஜ், பாலமுருகன், நட்டார், தமிழரசன், குமரேசன், கார்த்திக் மற்றும் ஊர்பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...

சென்னை-கோவை விமானக் கட்டணம் ரூ.16,500 ஆக உயர்வு: தொடர் விடுமுறை காரணம்

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சென்னை-கோவை விமான கட்டணம் ரூ.4,966-இலிருந்து ரூ.16,496 ஆக பல...

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளி ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் ஊர்வலம் நடைபெற்றது. இயேசு சிலுவையைச் சுமந்து செல்லும்...

ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நெசவாளர்கள் கூட்டமைப்பு - இலவச மின்சாரம் வேண்டும்

ஈரோட்டில் தமிழக நெசவாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து மனு அளித்தனர். கைத்தறி மற்றும் விசைத்தறி...

நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து இலவச மின்சாரம் வழங்க மனு

Erode மாவட்டத்தில் முதல்வர் Stalin ஐ சந்தித்த தமிழ்நாடு நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள், தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்ற இ...

கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க முதல்வரிடம் மனு

ஈரோட்டில் தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, கைத்தறி மற்றும...