கோவை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான சேவைகள் குறைப்பு

கோவை, சென்னை இடையே இயக்கப்படும் 3 விமானங்கள், கோவை, ஹைதராபாத் இடையே இயக்கப்படும் 2 விமானங்கள் மற்றும் கோவை, பெங்களூர் இடையே இயக்கப்படும் 1 விமானம் ஆகியவற்றின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.


கோவை: கோவை விமான நிலையத்திலிருந்து 27 உள்நாட்டு விமான சேவைகளும், 2 சர்வதேச விமான சேவைகளும் வழங்க முடியும் என்ற நிலையில் சமீப காலமாக விமான சேவைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (DGCA) உத்தரவின்படி தனியார் விமான நிறுவனமான இண்டிகோவின் 30 விமான சேவைகள் நாடு முழுவதும் அண்மையில் நிறுத்தப்பட்டது. இதில் இண்டிகோ கோவைக்கு வழங்கிய 6 சேவைகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

கோவை, சென்னை இடையே இயக்கப்படும் 3 விமானங்கள், கோவை, ஹைதராபாத் இடையே இயக்கப்படும் 2 விமானங்கள் மற்றும் கோவை, பெங்களூர் இடையே இயக்கப்படும் 1 விமானம் ஆகியவற்றின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இம்மாதம் 4 ஆம் தேதி முதல் இந்த சேவை குறைப்பு துவங்கிய நிலையில் இதன் காரணமாக கோவையில் இருந்து இப்பகுதிகளுக்கு விமானம் வழியே செல்வது பயணிகளுக்கு சவாலாக இருக்கிறது. விமான சேவைகளுக்கான டிமாண்ட் அதிகரிக்க டிக்கெட் கட்டணமும் பெருமளவு உயர்ந்திருக்கிறது.

இதனால் விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் இந்த உத்தரவை அறிவித்திருக்கிறது என்பது முழுமையாக இன்னும் வெளிவரவில்லை என்றாலும் தகவல்களின்படி இண்டிகோ வைத்துள்ள A320 என்ற வகை விமானங்களில் ஏற்பட்ட சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக இந்த விமான சேவைகள் நிறுத்தப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

அதேபோல இண்டிகோ நிறுவனம் தனது A320வகை விமானத்திற்கு மாற்றாக சில இடங்களில் ATR இனம் மற்றொரு வகை விமானத்தை அறிமுகப்படுத்தவும் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இண்டிகோ விமான நிறுவனத்தில் A320 ரக விமானங்களே அதிகம் உள்ளது என்பதும், 2023ல் தனது விமானங்களில் எரிபொருளை 6 கிலோ வரை மிச்சப்படுத்துவதற்காக Flap - 3 landing எனும் அபாயகரமான தரையிறங்கும் முறையை பின்பற்ற தனது பைலட்டுகளுக்கு பரிந்துரைத்து, அதை பின்பற்ற வைத்ததற்காக அந்த நிறுவனத்திற்கு விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் ரூ.30 லட்சம் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...