இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக அபுதாஹிர் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையில் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக அபுதாஹிர் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்து முன்னணி அமைப்பில் மாவட்ட செய்தி தொடர்பாளராக இருந்து வந்த சசிக்குமார் கடந்த செப்டம்பர் 22ம் தேதி சுப்ரமணியம்பாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த அபுதாஹிர் என்பவரை கோட்டைமேடு பகுதியில் இருந்து போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

இந்நிலையில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அபுதாஹிரை கண்டுபிடித்து தருமாறு அவரது உறவினர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை அடுத்து நீதிபதி வேலுச்சாமி சிபிசிஐடி அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது அபுதாஹிர் சிபிசிஐடி அலுவலகத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி மதுரசேகரன் முன்னிலையில் அபுதாஹிரை சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர். 

தொடர்ந்து அபுதாஹிரை வருகிற ஏப்ரல் 5ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 6 மாதங்களாக இந்த வழக்கில் குற்றவாளிகளை நெருங்க முடியாமல் போலீசார் திணறி வந்த நிலையில் தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...