தாராபுரத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பொங்கல் விழா கொண்டாட்டம்

பொங்கல் விழாவின் சிறப்பாக கால்நடைகளின் சிறப்பை விளக்கும் வகையில் கல்லூரி வளாகத்தில் ரேக்ளா வண்டியை மாணவிகள் ஓட்டினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டதுன், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம்-திருப்பூர் சாலையில் தனியார் கலை மற்றும் அறிவியல் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டும் கல்லூரி வளாகத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.



பொங்கல் பண்டிகையை வரவேற்கும் வகையில், மாணவிகள் அனைவரும் பாரம்பரிய உடைகள் அணிந்து வந்திருந்தனர்.

பசியைப் போக்கும் விவசாயிகளுக்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக கரும்பு மற்றும் மண் பானையில் பொங்கலிட்டு வணங்கினர்.



இதைத் தொடர்ந்து, கல்லூரி வளாகத்தில் கோதுமை, அரிசி மற்றும் நவதானியங்கள், வண்ண வண்ண பூக்களால் அலங்கரித்து கோலமிட்டு மாணவிகள் அசத்தினர்.



கயிறு இழுத்தல், இசை நாற்காலி, உறியடித்தல் போன்ற போட்டிகளும், கும்மியாட்டம், கரகாட்டம், மயிலாட்டம் போன்ற இசை நிகழ்ச்சிகளும் கோலகலமாக நடைபெற்றது.



விழாவின் சிறப்பாக கால்நடைகளின் சிறப்பை விளக்கும் வகையில் கல்லூரி வளாகத்தில் ரேக்ளா வண்டியை மாணவிகள் ஓட்டினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டதுன், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. பொங்கல் விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...