தாராபுரத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பொங்கல் விழா கொண்டாட்டம்

பொங்கல் விழாவின் சிறப்பாக கால்நடைகளின் சிறப்பை விளக்கும் வகையில் கல்லூரி வளாகத்தில் ரேக்ளா வண்டியை மாணவிகள் ஓட்டினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டதுன், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரம்-திருப்பூர் சாலையில் தனியார் கலை மற்றும் அறிவியல் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டும் கல்லூரி வளாகத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.



பொங்கல் பண்டிகையை வரவேற்கும் வகையில், மாணவிகள் அனைவரும் பாரம்பரிய உடைகள் அணிந்து வந்திருந்தனர்.

பசியைப் போக்கும் விவசாயிகளுக்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக கரும்பு மற்றும் மண் பானையில் பொங்கலிட்டு வணங்கினர்.



இதைத் தொடர்ந்து, கல்லூரி வளாகத்தில் கோதுமை, அரிசி மற்றும் நவதானியங்கள், வண்ண வண்ண பூக்களால் அலங்கரித்து கோலமிட்டு மாணவிகள் அசத்தினர்.



கயிறு இழுத்தல், இசை நாற்காலி, உறியடித்தல் போன்ற போட்டிகளும், கும்மியாட்டம், கரகாட்டம், மயிலாட்டம் போன்ற இசை நிகழ்ச்சிகளும் கோலகலமாக நடைபெற்றது.



விழாவின் சிறப்பாக கால்நடைகளின் சிறப்பை விளக்கும் வகையில் கல்லூரி வளாகத்தில் ரேக்ளா வண்டியை மாணவிகள் ஓட்டினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டதுன், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. பொங்கல் விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...