துடியலூரில் அனுமனின் திருவீதி உலாவை வரவேற்று முஸ்லீம் மதத்தினர் இனிப்பு வழங்கினர்

அனுமன் வீதி உலா துடியலூரிலுள்ள பள்ளிவாசல் பாதை வழியாக வரும் பொழுது பள்ளிவாசல் நிர்வாகத்தினர், விழா குழுவினர்களுக்கு கவுரவ செலுத்தும் வகையில் அனைவர்களுக்கும் இனிப்பு வழங்கி குடிநீர் பாட்டில் கொடுத்து சிறப்பித்தனர்.


கோவை: கோவை துடியலூர் அருகிலுள்ள விஸ்வநாதபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ குபேர ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா கோலகலமாக நடைபெற்றது. மாலை ஆஞ்சநேயர் திருவீதி உலா விஸ்வநாதபுரம், துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.



அப்போது, அனுமன் வீதி உலா துடியலூரிலுள்ள பள்ளிவாசல் பாதை வழியாக வரும் பொழுது பள்ளிவாசல் நிர்வாகத்தினர், விழா குழுவினர்களுக்கு கவுரவ செலுத்தும் வகையில் அனைவர்களுக்கும் இனிப்பு வழங்கி குடிநீர் பாட்டில் வழங்கி சிறப்பித்தனர்.

இதில், அனுமன் பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.



இது விழா குழுவினர்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. இதில் துடியலூர் பள்ளிவாசல் தலைவர் சுல்தான், துணைத்தலைவர் ஷேக் பாவா மகபூப், செயலாளர் அமீர் அப்பாஸ் மற்றும் நிர்வாகத்தினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் காவல்துறை உயரதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் இதில் பங்கு பெற்றனர். இப்பகுதியில் மத நல்லிணக்கத்திற்கு இதுஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்தது.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...