துடியலூரில் அனுமனின் திருவீதி உலாவை வரவேற்று முஸ்லீம் மதத்தினர் இனிப்பு வழங்கினர்

அனுமன் வீதி உலா துடியலூரிலுள்ள பள்ளிவாசல் பாதை வழியாக வரும் பொழுது பள்ளிவாசல் நிர்வாகத்தினர், விழா குழுவினர்களுக்கு கவுரவ செலுத்தும் வகையில் அனைவர்களுக்கும் இனிப்பு வழங்கி குடிநீர் பாட்டில் கொடுத்து சிறப்பித்தனர்.


கோவை: கோவை துடியலூர் அருகிலுள்ள விஸ்வநாதபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ குபேர ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா கோலகலமாக நடைபெற்றது. மாலை ஆஞ்சநேயர் திருவீதி உலா விஸ்வநாதபுரம், துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.



அப்போது, அனுமன் வீதி உலா துடியலூரிலுள்ள பள்ளிவாசல் பாதை வழியாக வரும் பொழுது பள்ளிவாசல் நிர்வாகத்தினர், விழா குழுவினர்களுக்கு கவுரவ செலுத்தும் வகையில் அனைவர்களுக்கும் இனிப்பு வழங்கி குடிநீர் பாட்டில் வழங்கி சிறப்பித்தனர்.

இதில், அனுமன் பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.



இது விழா குழுவினர்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. இதில் துடியலூர் பள்ளிவாசல் தலைவர் சுல்தான், துணைத்தலைவர் ஷேக் பாவா மகபூப், செயலாளர் அமீர் அப்பாஸ் மற்றும் நிர்வாகத்தினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் காவல்துறை உயரதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் இதில் பங்கு பெற்றனர். இப்பகுதியில் மத நல்லிணக்கத்திற்கு இதுஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்தது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...