திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜிடம் சட்டமன்ற கூடுதல் செயலாளர் மன்னிப்பு கேட்கும் வீடியோ வைரல்

நாயகர்-கலைஞர் கருத்தரங்கம் நிகழ்ச்சியில், சட்டமன்ற கூடுதல் செயலாளர் ரவிச்சந்திரன், மேடையில் அமர்ந்திருந்த ஆளுங்கட்சி திமுகவை சேர்ந்த திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜை கீழே போய் அமருமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சட்டமன்ற நாயகர்-கலைஞர் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.



அப்போது சட்டமன்ற கூடுதல் செயலாளர் ரவிச்சந்திரன் மேடையில் அமர்ந்திருந்த ஆளுங்கட்சி திமுகவை சேர்ந்த திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் கீழே போய் அமருமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.



இதனால் கோபமடைந்த திமுகவைச் சேர்ந்த எம்எல்ஏ செல்வராஜ் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் தன்னை மன்னித்து விடுமாறு சட்டமன்ற கூடுதல் செயலாளர் ரவிச்சந்திரன், திமுக எம்எல்ஏவிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



இவ்விழாவில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் மற்றும் அரசு தலைமை கொறடா முனைவர்.கோவி.செழியன் ஆகியோர் முன்னிலையில் இந்த மன்னிப்பு கேட்கும் நிகழ்வு நடைபெற்றது.



இந்நிலையில் திருப்பூர் தெற்கு தொகுதி திமுகவைச் சேர்ந்த செல்வராஜ் MLA அவர்களை உரையாற்ற அழைத்தபோது பேசுவதற்கு விருப்பமில்லை என்று கோபித்துக் கொண்டு மேடையின் பின்புறமாக வேக வேகமாக கிளம்பி சென்றுவிட்டார்.

நான் மேடைக்கு வரவில்லை. பேசவும் இல்லை என்றும் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.



அதன் பின்பு அரசு அதிகாரிகள் அவரை சமாதானம் செய்து மீண்டும் மேடைக்கு அழைத்து வந்து பின்னர் உரையாற்றினர்.



இந்த சம்பவம் கருத்தரமும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் மத்தியில் முகம் சுளிக்க கூடிய அளவில் இருந்தது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...