திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜிடம் சட்டமன்ற கூடுதல் செயலாளர் மன்னிப்பு கேட்கும் வீடியோ வைரல்

நாயகர்-கலைஞர் கருத்தரங்கம் நிகழ்ச்சியில், சட்டமன்ற கூடுதல் செயலாளர் ரவிச்சந்திரன், மேடையில் அமர்ந்திருந்த ஆளுங்கட்சி திமுகவை சேர்ந்த திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜை கீழே போய் அமருமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சட்டமன்ற நாயகர்-கலைஞர் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.



அப்போது சட்டமன்ற கூடுதல் செயலாளர் ரவிச்சந்திரன் மேடையில் அமர்ந்திருந்த ஆளுங்கட்சி திமுகவை சேர்ந்த திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் கீழே போய் அமருமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.



இதனால் கோபமடைந்த திமுகவைச் சேர்ந்த எம்எல்ஏ செல்வராஜ் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் தன்னை மன்னித்து விடுமாறு சட்டமன்ற கூடுதல் செயலாளர் ரவிச்சந்திரன், திமுக எம்எல்ஏவிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



இவ்விழாவில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் மற்றும் அரசு தலைமை கொறடா முனைவர்.கோவி.செழியன் ஆகியோர் முன்னிலையில் இந்த மன்னிப்பு கேட்கும் நிகழ்வு நடைபெற்றது.



இந்நிலையில் திருப்பூர் தெற்கு தொகுதி திமுகவைச் சேர்ந்த செல்வராஜ் MLA அவர்களை உரையாற்ற அழைத்தபோது பேசுவதற்கு விருப்பமில்லை என்று கோபித்துக் கொண்டு மேடையின் பின்புறமாக வேக வேகமாக கிளம்பி சென்றுவிட்டார்.

நான் மேடைக்கு வரவில்லை. பேசவும் இல்லை என்றும் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.



அதன் பின்பு அரசு அதிகாரிகள் அவரை சமாதானம் செய்து மீண்டும் மேடைக்கு அழைத்து வந்து பின்னர் உரையாற்றினர்.



இந்த சம்பவம் கருத்தரமும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் மத்தியில் முகம் சுளிக்க கூடிய அளவில் இருந்தது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...