தாராபுரத்தில் டிட்டோ ஜாக் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை முறைப்படுத்த வேண்டும், திமுக தேர்தல் வாக்குறுதியான சிபிஎஸ் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோ ஜாக் சார்பில் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிகுலாபுரம் தலைமை ஆசிரியர் குருசாமி தலைமை தாங்கினார்.



கருங்காலி வலசு தலைமை ஆசிரியர் ஆறுமுகம் மற்றும் பச்சாபாளையம் ஆசிரியர் பார்த்திபன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்தனர்.



ஆர்ப்பாட்டத்தின் போது தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றக்கூடிய 90% ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கக்கூடிய மாநில முன்னுரிமை வலியுறுத்தியும், அரசாணை 243 உடனடியாக ரத்து செய்ய வேண்டும், 2023 அக்டோபர் 12ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், பள்ளி கல்வி இயக்குனர், தொடக்கக் கல்வி இயக்குனர் உடன் டிட்டோ ஜாக் நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகள் தொடர்பான ஆணையை உடனடியாக வெளியிட வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை முறைப்படுத்த வேண்டும், திமுக தேர்தல் வாக்குறுதியான சிபிஎஸ் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தியும் மற்றும் சரண்டர் விடுப்பு தொடர வேண்டும்,ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை கணேசபுரம் பள்ளி கட்டுமானத்தை மேயர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் கணேசபுரம் பகுதியில் ரூ.95 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப் பள...

கோவை பீளமேடு பகுதியில் மழைநீர் வடிகால், சாக்கடை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் ரூ.10 லட்சம் மழைநீர் வடிகால் பணி, சாக்கடை அடைப்பு சரிசெய்தல், குப்பை சேகரிப்பு, மரக்குப...

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக் கடன் சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.15,000 வங்கிக் கடன் வழங்க ஆகஸ்ட் 24 முதல் 29 வரை பிரதான அலுவலகம் மற்றும்...

ஓணம் பண்டிகை: பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் அதிகரித்த தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பெங்களூரு SMVT மற்றும் திருவனந்தபுரம் வட...