தமிழக அரசுக்கு எதிராக தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்திய குடிமக்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தவறிவிட்டதாக கூறி இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் கட்சியின் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில் அண்ணா சிலை அருகே திமுக அரசை கண்டித்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்திய குடிமக்களை காப்பாற்ற தவறியதாக கூறும் தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு சூழலை தமிழக அரசு எச்சரிக்கையுடன் கையாண்டு இருக்க வேண்டும் என்றும், எச்சரிக்கை முன்னேற்பாடு நடவடிக்கைகளை சரியாக எடுத்து இருக்காத அரசை கண்டித்தும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மக்களை காப்பாற்ற தவறிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதாக இருந்தது. இந்த நிலையில் தாராபுரம் காவல் நிலையத்தில் அனுமதி பெறாமல் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு வராமல் அர்ஜுன் சம்பத் அவர் வந்த காரில் நிற்காமல் சென்று விட்டார்.



அதன் பிறகு ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட 50க்கும் மேற்பட்ட இந்து மக்கள் கட்சியினரை தாராபுரம் காவல் துறை கண்காணிப்பாளர் கலையரசன் தலைமையில் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர். இதனால் தாராபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வளர்ச்சிப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆணையர் கட்டா ரவி தேஜா IAS நேரில் ஆய்வு செய்தார். காலை உணவு திட்ட சம...

கோவை கணேசபுரம் பள்ளி கட்டுமானத்தை மேயர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் கணேசபுரம் பகுதியில் ரூ.95 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப் பள...

கோவை பீளமேடு பகுதியில் மழைநீர் வடிகால், சாக்கடை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் ரூ.10 லட்சம் மழைநீர் வடிகால் பணி, சாக்கடை அடைப்பு சரிசெய்தல், குப்பை சேகரிப்பு, மரக்குப...

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கிக் கடன் சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.15,000 வங்கிக் கடன் வழங்க ஆகஸ்ட் 24 முதல் 29 வரை பிரதான அலுவலகம் மற்றும்...

ஓணம் பண்டிகை: பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

ஓணம் பண்டிகையையொட்டி பயணிகளின் அதிகரித்த தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பெங்களூரு SMVT மற்றும் திருவனந்தபுரம் வட...