துடியலூர் அருகே சமத்துவ பொங்கல் கொண்டாடிய ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள்

புதுப்பானையில் பொங்கல் வைத்தும், அம்மி அரைத்தும், கயிறு இழுத்தும், உரி அடித்தும், சிலம்பம் சுற்றியும், பறை இசைத்தும், கல்லூரி மாணவ, மாணவிகள் பொங்கல் விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழ்ந்தனர்.


கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவ, மாணவிகள் ஆசிரியர்களுடன் இணைந்து சமத்துவ பொங்கலை கொண்டாடினர்.



கல்லூரி வளாகத்தில் வண்ணக்கோலமிட்டு, முளைப்பாரி வைத்து, புதுப்பானையில் பச்சரிசியிட்டு அது பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என குலவையிட்டு பொங்கல் வைத்து இறைவனுக்கு படையலிட்டு வழிபட்டனர்.



மேலும் பசு மாட்டிற்கு கற்பூரம் காட்டி பழம் வழங்கினர்.



தொடர்ந்து பாரம்பரிய உடையில் வந்திருந்த மாணவ, மாணவிகள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



இதில் மாணவிகள் அம்மி அரைத்தும், ஆசிரியைகள் மாணவிகள் பங்கேற்ற கயிறு இழுக்கும் போட்டிகள், உரியடித்தல், சிலம்பம், மெதுவாக சைக்கிள் ஒட்டுதல், பறை இசைத்தல் எனபல்வேறு போட்டிகள் நடத்தியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும் சினிமா பாடல்களுக்கு மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...