ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு -கோவை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு


கோவை மாநகராட்சி நடப்பாண்டு பட்ஜெட்டில் குப்பை மேலாண்மை, ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், லாரி நிறுத்தம், ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்டவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



கோவை மாநகராட்சியின் 2017-18ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மாநகராட்சி ஆணையாளரும், தனி அலுவலருமான விஜய கார்த்திகேயன் இன்று வெளியிட்டார்.

கடந்த 1996ம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக உள்ளாட்சி பிரதிநிதிகள் இன்றி மாநகராட்சி அதிகாரிகள் வெளியிட்ட பட்ஜெட்டில் மொத்த வருமானம் 1072 கோடிகள் எனவும் செலவீனம் 1059 கோடி ரூபாய் எனவும் உபரி நிதி 13 புள்ளி 04 கோடி ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பட்ஜெட்டில் கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக மத்திய அரசு மற்றும் மாநில அரசின் பங்கு தொகைகளான தலா கோடி ரூபாய் பெறப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குப்பை மேலாண்மையின் ஒரு பகுதியாக குப்பை தொட்டிகளில் குப்பைகள் நிறைந்தவுடன் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தும் சென்சார் திட்டம் செயல்படுத்த 15 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதே போல் கோவை மாநகராட்சியில் உள்ள 8 குளங்களை மேம்படுத்த 15 கோடி ரூபாயும், அம்ருட் திட்டத்தின் மூலம் மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள வார்டுகளை மேம்படுத்த 428

லட்சம் ரூபாயும் , வெள்ளலூர் பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க 171.86 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதே போல் பல அடுக்கு வாகன நிறுத்தம் உள்ளிட்ட பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...