பல்லடம் அரசு பேருந்து பணிமனை முன்பு கொட்டும் மழையிலும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

பல்லடம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பல்லடம் நகர நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க கூட்டுக்குழு, சிஐடியு, ஏஐடியுசி கூட்டுக்குழு, ஓய்வு பெற்றோர் நல சங்கத்தினர் ஆகியோர் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பணம், பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள 96 மாத அக விலைப்படியை உடனே வழங்க வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு தொழில் சங்கங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில் இன்று பல்லடம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பல்லடம் நகர நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க கூட்டுக்குழு, சிஐடியு, ஏஐடியுசி கூட்டுக்குழு, ஓய்வு பெற்றோர் நல சங்கத்தினர் ஆகியோர் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் மண்டல தலைவர் ரவீந்திரன், பல்லடம் நகர செயலாளர் ராமமூர்த்தி, வழக்கறிஞர் பொன்னுசாமி, தமிழ்நாடு பழனிச்சாமி, நகர பொருளாளர் தர்மர், கிளைச் செயலாளர் ரவிபிரபு மற்றும் கிளை கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...