குடிமங்கலத்தில் மாற்று கட்சியை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறுவது உறுதி. சட்டமன்றத் தேர்தலில் மக்களை ஏமாற்றி வாக்குகள் பெற்று திமுகவினர் வெற்றி பெற்றுவிட்டனர். நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


திருப்பூர்: உடுமலையில் மாற்று கட்சியை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள குடிமங்கலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சரும், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான உடுமலை கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் அம்மாபட்டி துரைசாமி ஏற்பாட்டில், ஆமந்தகடவு ஊராட்சி முன்னாள் திமுக தலைவர் சிவகாமி, குடிமங்கலம் ஒன்றிய குழு திமுக கவுன்சிலர் செல்வராஜ், தேமுதிக முன்னாள் ஒன்றிய செயலாளர் முத்துசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஹரிஷ், திமுகவைச் சேர்ந்த கௌதம், பிரகாஷ், கார்த்திக்குமார், உட்பட மதிமுக, பாஜக, பாமக கொங்குநாடு முன்னேற்ற கழகம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.



பின்னர் கட்சியில் இணைந்தவர்களுக்கு பொன்னாடை அணிவித்து உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உடுமலை தொகுதியில் கால்நடை பல்கலைக்கழகம் மற்றும் குடியிருப்பு வசதி வாரியம் மூலம் வீடுகள் மற்றும் உடுமலையில் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தப்பட்டது. ஆனால் தற்பொழுது அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்கள் என கூறி திமுகவினர் புறக்கணித்து வருகின்றனர்.

மேலும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறுவது உறுதி. சட்டமன்றத் தேர்தலில் மக்களை ஏமாற்றி வாக்குகள் பெற்று திமுகவினர் வெற்றி பெற்றுவிட்டனர். நாடாளுமன்றத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள். தற்சமயம் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாற்று கட்சியைச் சேர்ந்தவர்கள் தினமும் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர் என்று கூறினார்.

இந்த விழாவில் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட துணை துணைச் செயலாளர் சாஸ்திரி சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் அன்பர்ராஜன், முருகேசன், பிரேனஷ், பெரிய கோட்டை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஸ்வநாதன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஜாகிர் உசேன் மற்றும் சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...