பொள்ளாச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் கோவை குமரகுரு அணி வெற்றி

கோவை குமரகுரு அணி முதல் பரிசை தட்டிச் சென்றது. கோவை யுனைடெட் அணி இரண்டாம் பரிசும், சென்னை சத்தியபாமா அணி மூன்றாம் பரிசும், திண்டுக்கல் GTN அணி நான்காம் பரிசும் வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பணமும் பரிசு கோப்பைகளும் வழங்கப்பட்டன.


கோவை: பொள்ளாச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் கோவை குமரகுரு அணி முதல் பரிசை தட்டிச் சென்றது. கூடை பந்தாட்ட விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக நேஷனல் கூடை பந்தாட்ட கழகம் சார்பில், தாக்கூர் கோப்பை 26 ஆவது மாநில அளவிலான கூடை பந்து போட்டி பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கடந்த 3ம் தேதி புதன் கிழமை தொடங்கியது.

இதில் சென்னை, கோவை, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 24 அணிகள் பங்கு பெற்று விளையாடின.



நாக் அவுட் மற்றும் லீக் முறையில் நடைபெற்ற இந்த போட்டிகளில் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அணிகளுக்கு இடையேயான போட்டிகள் நேற்று இரவு நடைபெற்றது.



விறுவிறுப்பாக நடைபெற்ற லீக் போட்டிகளில் தொடர்ந்து மூன்று அணிகளுடன் விளையாடி வெற்றி பெற்ற கோவை குமரகுரு அணி முதல் பரிசை தட்டிச் சென்றது. கோவை யுனைடெட் அணி இரண்டாம் பரிசும், சென்னை சத்தியபாமா அணி மூன்றாம் பரிசும், திண்டுக்கல் GTN அணி நான்காம் பரிசும் வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பணமும் பரிசு கோப்பைகளும் வழங்கப்பட்டன.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...

சென்னை-கோவை விமானக் கட்டணம் ரூ.16,500 ஆக உயர்வு: தொடர் விடுமுறை காரணம்

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சென்னை-கோவை விமான கட்டணம் ரூ.4,966-இலிருந்து ரூ.16,496 ஆக பல...

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளி ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் ஊர்வலம் நடைபெற்றது. இயேசு சிலுவையைச் சுமந்து செல்லும்...

ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நெசவாளர்கள் கூட்டமைப்பு - இலவச மின்சாரம் வேண்டும்

ஈரோட்டில் தமிழக நெசவாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து மனு அளித்தனர். கைத்தறி மற்றும் விசைத்தறி...

நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து இலவச மின்சாரம் வழங்க மனு

Erode மாவட்டத்தில் முதல்வர் Stalin ஐ சந்தித்த தமிழ்நாடு நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள், தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்ற இ...