நஞ்சியம்பாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையை கடக்க முயன்ற ஆண் மான் பலி

ஊதியூர் மலைப்பகுதியில் மழை இல்லாத காரணத்தால் வறண்டு கிடக்கிறது. இதனால், தண்ணீர் மற்றும் உணவு தேவைக்காக வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகிறது. அவ்வாறு கூட்டம், கூட்டமாக சாலையை கடக்க முயலும் மான்கள் சில சமயங்களில் வாகனத்தில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ளது நஞ்சியம்பாளையம். ஊதியூர் மலைப்பகுதியில் காடுகள் அதிகம் நிறைந்த பகுதி என்பதால் ஊதியூர் மலையில் மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்நிலையில் ஊதியூர் மலைப்பகுதியில் மழை இல்லாத காரணத்தால் வறண்டு கிடக்கிறது. இதனால், தண்ணீர் மற்றும் உணவு தேவைக்காக வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகிறது. அவ்வாறு மான்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்து வந்து கொண்டுள்ளது.



மேலும் தற்போது தாராபுரம் அருகில் நஞ்சியம்பாளையம் என்ற இடத்தில் தண்ணீர் தேவைக்காகவும், உணவு தேவைக்காகவும் காடுகளில் மேய்ந்து கொண்டு இருந்த மான்கள் சாலையை கடக்கும் போது, மூன்று மான்களில் ஒரு மான் மட்டும் எதிர்பாராதமாக அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானது.



இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கூறுகையில் இந்த பலியான மானுக்கு இரண்டு வயது இருக்கும், எனவும் இது ஆன் மான் எனவும் தெரிவித்தனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...