தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கக்கோரி 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கக்கோரி உப்பாறு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் அர்ஜுனன் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உப்பாறு அணை செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நடு இரவில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கக்கோரி 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உப்பாறு அணை செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இரவில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்கக்கோரி உப்பாறு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் அர்ஜுனன் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உப்பாறு அணை செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நடு இரவில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இது குறித்து உப்பாறு விவசாயிகள் சங்க உறுப்பினர் சிவகுமார் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள உப்பாறு அணைக்கு பி.ஏ.பி தண்ணீரை திறந்துவிட வலியுறுத்தி உப்பாறு பாசன விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் மற்றும் 10-கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஸ்துராஜ் விவசாயிகளின் கோரிக்கையான ஏற்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து 1994 உத்தரவின்படி உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க வேண்டும். உப்பாறு அன்னைக்கு தண்ணீர் வரும் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பாசனத்துக்கான மின் துண்டிப்பு அமல்படுத்த வேண்டும். வேளாண்மை இல்லாத மாற்று பயன்பாட்டிற்கு உள்ள நிலங்களை கண்டறிந்து அதற்கு தகுந்தபடி நீர் வினியோகம் செய்ய வலியுறுத்த வேண்டும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இரண்டு ஆண்டு காலம் ஆகியும் செயல்படுத்தாத திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், மேலும் திருமூர்த்தி அணையில் இருந்து உப்பாறு அணைக்கு 24 அடி முழு கொள்ளளவு நீர் ஆன அரை டி.எம்.சி தண்ணீரை வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் வந்து உத்தரவாதம் அளிக்க வேண்டும், அப்படி இல்லாத பட்சத்தில் தொடர்ந்து பகுதியில் போராட்டம் நடைபெறும் என இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் விவசாயிகள் தெரிவிக்கையில் ஆடு மாடு கோழிகளுக்கு தண்ணீர் இன்றியும், மேலும் மனிதர்களுக்கு குடிப்பதற்கு கூட தண்ணீர் இன்றி விவசாயம் செய்ய முடியாமலும் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எங்களுக்கு உயிர் வாழ்வதற்கு உயிர் தண்ணீராவது அதிகாரிகள் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் போராட்டத்தின் போது விவசாயிகள் தரையில் அமர்ந்தும் படுத்து கொண்டும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் அணைப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...