கேசிடி கல்லூரி நிறுவனரின் 94-வது பிறந்தநாள் விழாவில் மகாலிங்கம் செஸ் அகாடமியை துவக்கிவைத்த கிரான்ட் மாஸ்டர் விஷ்வநாதன் ஆனந்த்

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் நிறுவனர் அருட்செல்வர் என்.மகாலிங்கம் 94-வது பிறந்தநாள் விழா முன்னிட்டு மார்ச் 20 மற்றும் 21 ஆகிய இருநாட்கள் அக்கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியின்போது என்.மகாலிங்களம் அவர்களின் அவரது பார்வையிலான அதிகாரம், சமூக உணர்வுள்ள மனித நேய உணர்வு உள்ளிட்டவை குறித்து பகிரப்பட்டது.



மார்ச் 20 முதல் நாள் நிகழ்ச்சியில், மகாத்மா காந்தி ஊக்கத்தொகை மற்றும் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. மார்ச் 21, செவ்வாயன்று குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் நிறுவனர் நாளை முன்னிட்டு இணைத் தலைவர் ஸ்ரீ ஷங்கர் வானவராயர் வரவேற்புறை ஆற்றினார்.



பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் சிறப்புரை ஆற்றினார். ஸ்ரீ மானுவல் ஆரோன் அவர்களை உலக செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவர் வி.சுந்தர் பொன்னாடை போற்றி வரவேற்றார். துணை தலைவர் எம்.மாணிக்கம், நிருபர் ஸ்ரீ. எம்.பாலசுப்ரமணியம் மற்றும் அக்கல்லூரி முதல்வர் ஆர்.எஸ்.குமார் ஆகியோர் விழாவிற்கு தலைமை தாங்கினார்கள்.



நா.மஹாலிங்கம் சாதனையாளர் விருது இவ்வருடம் மானுவேல் ஆரோனுக்கு செஸ் விளையாட்டை இந்தியாவில் வளர்ச்சி பெற அரும்பாடு பட்டமைக்கு வழங்கப்பட்டது. ஆரோன் நா.மஹாலிங்கம் அவர்களுடன் இருந்த நட்பை பற்றியும், பின் அவர் செஸ் மீது கொண்ட ஈடுபாடும், அக்கறையும் பற்றி அவரது உரையில் விரிவாக எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக நா.மஹாலிங்கம் செஸ் அகாடமி பள்ளி மாணவர்கள், செஸ் வீரர்கள் மற்றும் செஸ் ஆர்வலர்களுக்கு, செஸ் போட்டிகள் மற்றும் பயிற்சிகள் என ஊக்குவிக்கும் வண்ணம் நிறுவப்பட்டுள்ளது. 

செஸ் ஆர்வலரான அருட்செல்வரின் நினைவாக இந்த அகாடமி துவங்கப்பட்டுள்ளது. நா.மஹாலிங்கம் செஸ் அகாடமியை முன்னால் உலக சாம்பியனான ஜி.எம்.விஸ்வநாதன் ஆனந்த் திறந்து வைத்தார்



இதனைத்தொடர்ந்து, விஸ்வநாதன் ஆனந்த பேசுகையில், அருட்ச்செல்வரால் தான் தமிழ்நாடு செஸ் அகாடமி உருவாக்கப்பட்டது என்று குறிப்பிட்டார். மேலும் கொங்கு மண்டலத்தில் இந்த அகாடமி தலை சிறந்த அகாடெமியாக உருவெடுக்கும் மற்றும் இந்த அகாடெமியிலிருந்து பல சாம்பியன்கள் உதயமாவார்கள் என்று புகழுரைத்தார்.

மேலும், இந்நிகழ்சியில் ஜோதி நிலையம் மற்றும் விருத்தினர் மாளிகை திறப்பு விழா, தேவாரப் பண்ணிசைப் போட்டி, லய சமர்ப்பணம் போன்ற கலை நிகழ்சிகளும் நடைபெற்றன.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...