கோவையில் ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பால பணிகள் - போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி

விடுமுறை தினங்கள் முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள சூழலில் அவினாசி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. தினமும் காலையும், மாலையும் நவ இந்தியா சிக்னல் தொடங்கி ஹோப்காலேஜ் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் அளவிற்கு நெரிசல் ஏற்பட்டு வருகிறது.


கோவை: கோவை-அவினாசி சாலையில், உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை, 10.1 கி.மீ. துாரத்துக்கு ரூ.1,621.30 கோடியில், மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேம்பாலம் கட்டப்படுகிறது. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய இந்த மேம்பாலம், 17.25 மீட்டர் அகலத்தில் நான்கு வழிச்சாலையாக அமைகிறது.

பெட்டி வடிவ கர்டர் தயாரிக்கப்பட்டு, செக்மென்ட் தொழில் நுட்ப முறையில், ஓடுதளம் அமைக்கப்படுகிறது. மேலும், 10½ மீட்டர் அகலத்தில் ரோட்டின் இருபுறமும், சர்வீஸ் ரோடும், ஒன்றரை மீட்டர் அகலத்தில் மழை நீர் வடிகாலுடன் நடைபாதையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆங்காங்கே மழை நீர் வடிகால் கட்டும் பணி நடந்து வருகிறது. பொதுமக்கள் சிரமமின்றி சாலையைக் கடக்க, கிருஷ்ணம்மாள் கல்லுாரி, கே.எம்.சி.எச்., ஆஸ்பத்திரி, ஜி.ஆர்.ஜி., பள்ளி, பி.எஸ்.ஜி. கல்லுாரி மற்றும் லட்சுமி மில் சந்திப்பு ஆகிய 5 பகுதிகளில் சுரங்க நடைபாதை அமைக்க மற்றும் உயர்மட்ட நடைபாதை அமைக்கவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தவிர மேம்பால பயணத்தின் போது இறங்கி ஏறும் வகையில் சாய்தளமும் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக கோவை மாநகர போலீசார் அவினாசி சாலை உட்பட கோவையின் பல்வேறு சாலைகளிலும் 'யு' டர்ன் முறையை அமல்படுத்தினர். இதனால் வாகன ஓட்டிகள் சிக்னலில் காத்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே விடுமுறை தினங்கள் முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள சூழலில் அவினாசி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. தினமும் காலையும், மாலையும் நவ இந்தியா சிக்னல் தொடங்கி ஹோப்காலேஜ் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் அளவிற்கு நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு மேம்பால பணிகளின் வேகம் பகுதியளவுக்கு மேல் குறைந்துவிட்டது. மேம்பால பணிகள் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பணியில் தொய்வு காரணமாக பாலம் கட்டி முடிக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் ஆமை வேகத்தில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால் நாள்தோறும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் மேம்பால கட்டுமான பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...