வால்பாறை அட்டகட்டி பகுதியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது

முகாமில் தொகுப்பு வீடு, கழிப்பறை, கல்வி கடன், மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, பெற்றோர்களை இழந்த குழந்தைகள் உதவித்தொகை, மாற்று திறனாளி உதவி தொகை, போன்ற உதவிகளுக்காக பொதுமக்கள் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் இரண்டாம் தேதி முதல் ஆறாம் தேதி வரை மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற இருக்கிறது. ஒன்னாவது வார்டு மற்றும் இரண்டாவது வார்டு உட்பட்ட கவர்கள், சக்தி, தலனார், ஊமையாண்டி முடக்கு, வாட்டர்பால்ஸ் ஆகிய எஸ்டேட் பகுதிகள் மற்றும் பழங்குடி கிராமம் பூனாட்சி, கீழ் பூனாட்சி, வெள்ளிமுடி, அப்பராளியார் போன்ற ஆதிவாசி பழங்குடி கிராமங்களில் வசிக்கும் மக்கள் பயன்படும் வகையில் அட்டகட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது.



காலை 10 மணிக்கு துவங்கிய முகாம் 3 மணி வரை நடைபெற்றது. இம்முகாமில் நகராட்சி பணியாளர்கள், வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள், மருத்துவத்துறை, தீயணைப்பு துறை, கல்வித்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை, வனத்துறை, ஆகிய அனைத்து அரசு துறை அதிகாரிகளும் கலந்துகொண்டு பொதுமக்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டனர்.



முகாமில் தொகுப்பு வீடு வேண்டும், கழிப்பறை வேண்டும், கல்வி கடன் வேண்டும், மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, பெற்றோர்களை இழந்து குழந்தைகள் உதவித்தொகை,மாற்று திறனாளி உதவி தொகை, போன்ற உதவிகளுக்கான மனுக்கள் பெறப்பட்டது இதில் 213 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வளிக்கப்படும் என்று அரசுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட துணை ஆட்சியர் நிரைமதி, வால்பாறை வட்டாட்சியர் வாசுதேவன், நகராட்சி ஆணையாளர் பெர்பெட்டி டெரன்ஸ் லியோ, நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி, துணைத் தலைவர் செந்தில்குமார் மற்றும் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், திமுக நகரச் செயலாளர் சுதாகர் மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...