வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் குட்டியுடன் யானை தூங்கும் காட்சி வெளியீடு

தோணிமுடி எஸ்டேட் பகுதியில் சென்று உள்ள யானைகளை ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணித்து வந்துள்ளனர். அப்போது, தேயிலை தோட்ட பகுதியில் தாய் யானையும், குட்டி யானையும் அயர்ந்து உறங்கும் காட்சி கேமிராவில் பதிவாகியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் யானைகள் தனியாகவும், கூட்டமாகவும் சுற்றி வருகிறது.



பகல் நேரத்தில் தேயிலை தோட்டத்தில் உலாவும் யானைகளை பார்க்க முடிகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பண்ணிமேடு எஸ்டேட் பகுதியில் 13 காட்டு யானைகள் குட்டியுடன் எஸ்டேட் பகுதியில் சுற்றி வந்தது. இதில் இரவு நேரத்தில் குட்டி யானை கூட்டத்திலிருந்து பிரிந்து சென்றது. அதை மானாம்பள்ளி வன சரகர் மணிகண்டன் தலைமையில் வனத்துறையினர் குட்டி யானையை தாயுடன் சேர்த்தனர்.

அந்த தாய் யானையையும் குட்டி யானையும் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் தோணிமுடி எஸ்டேட் பகுதியில் சென்று உள்ள யானைகளை ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து உள்ளனர்.



தேயிலை தோட்ட பகுதியில் தாய் யானையும் குட்டி யானையும் அயர்ந்து உறங்கும் காட்சி பதிவு செய்து வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...