உடுமலை அருகே மதுபான கடை அமைக்க எதிர்ப்பு - குடிமங்கலம் ஒன்றிய அலுவலகம் முற்றுகை

புதிய மதுக்கடை அமைத்தால் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படக்கூடும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு மதுபான கடையை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும். இல்லை என்றால் பொதுமக்களை திரட்டி தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் உள்ள பொள்ளாச்சி சாலையில் தனியார் இடத்தில் அதிநவீன குளிர்சாதன மதுபான கூடம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பெதம்பட்டியில் நால்ரோடு பகுதி சுற்றுவட்டார 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையப் பகுதியாக உள்ளது.



மேலும் இப்பகுதியில் பள்ளிகள், கோவில்கள், வணிக நிறுவனங்கள், பொள்ளாச்சி தாராபுரம் தேசிய நெடுச்சாலை அமைந்துள்ளது. ஏற்கனவே இப்பகுதியில் உள்ள அரசு மதுக்கடைகளால் பொதுமக்கள் பள்ளி மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.



தற்பொழுது மீண்டும் கூடுதலாக அரசு மதுபான கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சார்பில் குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வட்டார வளர்ச்சி துறை அதிகாரியிடம் மனு வழங்கினர்.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது, பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இடமாகும். இப்பகுதியில் அரசு மதுபான கடை இருந்தால் விபத்துக்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படக்கூடும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு மதுபான கடையை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் இல்லை என்றால் பொதுமக்களை திரட்டி தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

Newsletter

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...