கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் 'எப்போ வருவாரோ’ ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சி

'எப்போ வருவாரோ’ ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சியின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை மாலையில் வள்ளலார் குறித்து ஸ்ரீ கிருஷ்ண ஜகந்நாதன் உரையாற்றுகிறார்.


கோவை: கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் ‘எப்போ வருவாரோ’ ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தப்படும். அதன்படி 18-ஆம் ஆண்டு ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் உள்ள சரோஜினி நடராஜ் கலையரங்கில் திங்கள்கிழமை தொடங்கியது. வரும் 9 ஆம் தேதி வரை தினசரி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பேச்சாளா்கள் பங்கேற்கின்றனா்.

முதல் நாளான திங்கள்கிழமை அருளாளா் ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் என்ற தலைப்பில் பேச்சாளா் பாரதி பாஸ்கா் பங்கேற்றுப் பேசினார். முன்னதாக, ஆன்மிகத் தொண்டாற்றி வருபவா்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் அருள் வளா்செம்மல் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், கோவை அரன் பணி அறக்கட்டளையின் தலைவா் அ.தியாகராசன், திருப்பூா் சுப்ரீம் குழும நிறுவனங்களின் நிறுவனா் எஸ்.ஏ.ராதாகிருஷ்ணன், திருப்பூா் எஸ்பிஎஸ் அன்னையா் இல்ல நிர்வாகிகள் எஸ்பிஎஸ் தாமோதரன், சாவித்திரி தாமோதரன், அன்னூா் ஸ்ரீராமானுஜா் பக்த பேரவையின் செயலா் ஏ.வி.திருமூா்த்தி, புன்செய் புளியம்பட்டி அண்ணாமலையார் திருக்கோயில் செயலா் வெங்கிட்டம்மாள் ஐங்கரன் ஆகியோருக்கு ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குநா் எம்.கிருஷ்ணன் அருள்வளா் செம்மல் விருது வழங்கி கௌரவித்தார்.



நிகழ்ச்சியில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் அ.நிர்மலா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ‘எப்போ வருவாரோ’ ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சியின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை (ஜனவரி 2) வள்ளலார் குறித்து ஸ்ரீ கிருஷ்ண ஜகந்நாதன் உரையாற்றுகிறார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...