புத்தாண்டு விடுமுறையில் கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

புத்தாண்டு அன்று ஒரேநாளில் மட்டும் 327 குழந்தைகள் உட்பட 2,400க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குடும்பம், குடும்பமாக அருவியில் குளித்து மகிழ்ந்தோடு, செல்போன்களில் படங்களையும் எடுத்துச் சென்றனர்.


கோவை: புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு கோவை குற்றாலத்திற்கு வந்த 2,400 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.



கோவை சிறுவாணி சாலை சாடிவயல் பகுதியில் உள்ள கோவை குற்றாலத்திற்கு தமிழகம் மட்டுமல்லாமல், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.



இந்நிலையில் ஆங்கில புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு பல்வேறு பகுதியில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள், காலையிலிருந்தே நீண்ட வரிசையில் நின்று குற்றால அருவிக்கு செல்வதற்கான டிக்கெட்டுகளை பெற்றுக் கொண்டு, பின்னர் சுற்றுலா வாகனத்தில் ஏறி குற்றாலம் அருவிக்கு சென்றனர்.



அப்பகுதியில் உள்ள இயற்கை அழகை ரசித்த சுற்றுலாப் பயணிகள், பின்னர் குற்றாலம் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.



புத்தாண்டு விடுமுறை என்பதால் ஒரே நாளில் 327 குழந்தைகள் உட்பட 2,400க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குடும்பம் குடும்பமாக அருவியில் குளித்து மகிழ்ந்தோடு, செல்போன்களில் படங்களையும் எடுத்துச் சென்றனர். அதிகளவு சுற்றுலா பயணிகள் வரத்து இருந்ததால் வனத்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...