புத்தாண்டு விடுமுறையில் கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

புத்தாண்டு அன்று ஒரேநாளில் மட்டும் 327 குழந்தைகள் உட்பட 2,400க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குடும்பம், குடும்பமாக அருவியில் குளித்து மகிழ்ந்தோடு, செல்போன்களில் படங்களையும் எடுத்துச் சென்றனர்.


கோவை: புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு கோவை குற்றாலத்திற்கு வந்த 2,400 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.



கோவை சிறுவாணி சாலை சாடிவயல் பகுதியில் உள்ள கோவை குற்றாலத்திற்கு தமிழகம் மட்டுமல்லாமல், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.



இந்நிலையில் ஆங்கில புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு பல்வேறு பகுதியில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள், காலையிலிருந்தே நீண்ட வரிசையில் நின்று குற்றால அருவிக்கு செல்வதற்கான டிக்கெட்டுகளை பெற்றுக் கொண்டு, பின்னர் சுற்றுலா வாகனத்தில் ஏறி குற்றாலம் அருவிக்கு சென்றனர்.



அப்பகுதியில் உள்ள இயற்கை அழகை ரசித்த சுற்றுலாப் பயணிகள், பின்னர் குற்றாலம் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.



புத்தாண்டு விடுமுறை என்பதால் ஒரே நாளில் 327 குழந்தைகள் உட்பட 2,400க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குடும்பம் குடும்பமாக அருவியில் குளித்து மகிழ்ந்தோடு, செல்போன்களில் படங்களையும் எடுத்துச் சென்றனர். அதிகளவு சுற்றுலா பயணிகள் வரத்து இருந்ததால் வனத்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...