கோவையில் 11 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - கடை உரிமையாளர்களுக்கு அபராதம்

கடந்த ஜனவரி முதல் டிசம்பர் வரை 1,451 கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி, 11 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு ரூபாய் 25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.


கோவை: தகவல் நெகிழி என்று அழைக்கப்படும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் தட்டு, பாலித்தீன் கவர் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்ட்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.

மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையை தடுக்க தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்வதுடன், கடைகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

அதன்படி கடந்த ஜனவரி முதல் டிசம்பர் வரை 1,451 கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 11 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு ரூபாய் 25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது என்று கோவை மாநகராட்சி அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனர்.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...