தாராபுரம் அருகே டிராக்டர் மோதி தையல் தொழிலாளி பலி - உறவினர்கள் போராட்டம்

டிராக்டர் ஏற்றிய பாலசுப்பிரமணியத்தை கைது செய்ய வேண்டும் என முருகனின் மனைவி, அவர்களது உறவினர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் தாராபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கரையூர் பகுதியில் தையல் கடை நடத்தி வருபவர் முருகன் (50). இவர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் தாராபுரம் கரூர் சாலையில் உள்ள கரையூர் பகுதி வழியாக வந்து கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த டிராக்டர் இவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். இவரை உடனடியாக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார்.



முருகன் மீது டிராக்டர் ஏற்றிய பாலசுப்பிரமணியத்தை கைது செய்ய வேண்டும் என முருகனின் மனைவி அவர்களது உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தாராபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து தாராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விஆரணை நடத்தினர். சம்பவம் குறித்து முருகனின் மனைவி தாராபுரம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் கொளத்துப்பாளையம் பேரூராட்சி கரையூர் பகுதியை சேர்ந்த டிராக்டர் ஓட்டுநர் பாலசுப்பிரமணியன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தலைமறைவாக உள்ள பாலசுப்பிரமணியத்தை தேடி வருகின்றனர்.

தையல் தொழிலாளி முருகனின் உறவினர்கள் தாராபுரம் அரசு மருத்துவமனையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் தாராபுரம் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...