உடுமலை நகராட்சி பகுதியில் புகையிலை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு

பஸ் நிலைய பகுதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது விதிகளை மீறி விற்பனை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலைய பகுதி கடைகளில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பாக அதிகாரிகள் தரப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

உடுமலை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆனந்த் குமார் உத்தரவின் பேரில் பொது சுகாதாரத்துறை, காவல்துறை இணைந்து புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பான ஆய்வு மேற்கொண்டனர்.

மாவட்ட நல கல்வியாளர் ராஜ்குமார், புகையிலை சமூக சேவகர் பிரவீன் குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சோனை, சுகாதார ஆய்வாளர்கள் சஞ்சய், தினேஷ் மற்றும் ஜெயபால், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் ஆகியோர் கொண்ட குழு பஸ் நிலைய பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர்.

அப்போது விதிகளை மீறி விற்பனை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் கடை உரிமையாளருக்கும் பொதுமக்களுக்கும் புகையிலை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...