உடுமலை நகராட்சி பகுதியில் புகையிலை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு

பஸ் நிலைய பகுதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது விதிகளை மீறி விற்பனை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலைய பகுதி கடைகளில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பாக அதிகாரிகள் தரப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

உடுமலை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆனந்த் குமார் உத்தரவின் பேரில் பொது சுகாதாரத்துறை, காவல்துறை இணைந்து புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பான ஆய்வு மேற்கொண்டனர்.

மாவட்ட நல கல்வியாளர் ராஜ்குமார், புகையிலை சமூக சேவகர் பிரவீன் குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சோனை, சுகாதார ஆய்வாளர்கள் சஞ்சய், தினேஷ் மற்றும் ஜெயபால், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் ஆகியோர் கொண்ட குழு பஸ் நிலைய பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர்.

அப்போது விதிகளை மீறி விற்பனை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் கடை உரிமையாளருக்கும் பொதுமக்களுக்கும் புகையிலை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Newsletter

பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் மற்றும் வனங்கள் தினம் கொண்டாடப்பட்டது

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் மார்ச் 28 அன்று கொ...

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...