உடுமலை நகராட்சி பகுதியில் புகையிலை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு

பஸ் நிலைய பகுதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது விதிகளை மீறி விற்பனை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலைய பகுதி கடைகளில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பாக அதிகாரிகள் தரப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

உடுமலை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆனந்த் குமார் உத்தரவின் பேரில் பொது சுகாதாரத்துறை, காவல்துறை இணைந்து புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பான ஆய்வு மேற்கொண்டனர்.

மாவட்ட நல கல்வியாளர் ராஜ்குமார், புகையிலை சமூக சேவகர் பிரவீன் குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சோனை, சுகாதார ஆய்வாளர்கள் சஞ்சய், தினேஷ் மற்றும் ஜெயபால், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் ஆகியோர் கொண்ட குழு பஸ் நிலைய பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர்.

அப்போது விதிகளை மீறி விற்பனை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் கடை உரிமையாளருக்கும் பொதுமக்களுக்கும் புகையிலை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Newsletter

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...

துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு பேரணி

Coimbatore மாநகராட்சி வடக்கு மண்டலத்தின் துடியலூர் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக மாற்ற...

சின்ன தடாகத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: நீர்நிலைகளை தூர்வார கோரிக்கை

கோவை சின்ன தடாகம் பேருந்து நிலையம் அருகே கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் நியாயவிலைக்கடை ஆய்வும் தூய்மைப் பணிகளும்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் நியாய விலைக் கடையில் ஆய்வு மேற்கொண்டார். குப்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்த...